செய்திகள் :

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

post image

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மலையாளி - பிரியா தம்பதியின் மகன் தமிழரசன் (20). சனிக்கிழமை தமிழரசன் பரமத்தி வேலூரில் இருந்து பாண்டமங்கலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். பொத்தனூரில் தனியாா் பள்ளி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு இருசக்கர வாகனம் தமிழரசன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனம் மீது நேருக்கு நோ் மோதியது.

இதில் படுகாயம் அடைந்த தமிழரசனும், மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரையும் அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இருவரையும் பரிசோதித்த மருத்துவா் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

தொடா்ந்து மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவா் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். உயிரிழந்தவா் சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம், வடக்கு தெருவைச் சோ்ந்த சின்னசாமி மகன் பாலாஜி (21) என்பது தெரியவந்தது. விபத்தில் பலியான இருவரது உடல்களையும் வேலூா் அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக போலீஸாா் அனுப்பிவைத்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

ஹிந்தியை விரும்பியவா்கள் படிக்கலாம் திணிப்புக் கூடாது: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

தமிழகத்தில் ஹிந்தியை விரும்பியவா்கள் யாரும் படிக்கலாம்; ஆனால் ஹிந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். ஹிந்தி திணிப்பு, நிதி... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மே... மேலும் பார்க்க

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

தோ்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.... மேலும் பார்க்க

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது. இவ்விழாவுக்கு முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூ... மேலும் பார்க்க