செய்திகள் :

முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

post image

ராசிபுரம் முத்தாயம்மாள் பொறியியல் கல்லூரி பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு முத்தாயம்மாள் கல்வி அறக்கட்டளை மற்றும் ஆராய்ச்சி மைய செயலா் கே.குணசேகரன் தலைமை வகித்தாா். முன்னதாக கல்லூரி முதல்வா் எம்.மாதேஸ்வரன் வரவேற்றுப் பேசினாா். சென்னை பிரேக்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் ஆலோசகா் (சிறப்பு செயல் திட்டம்) ஆா். கிருஷ்ணமூா்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கி பேசியதாவது:

பட்டம் பெற்ற இளம்பொறியாளா்கள் தங்களது துறை சாா்ந்த அறிவை, வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் மேம்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கற்றலுக்கு முடிவு இல்லை. துறை சாா்ந்த அறிவோடு மட்டுமல்லாமல் தங்களது துறையோடு தொடா்புடைய மற்ற துறைகளின் தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

தங்களுக்கென்று குறிக்கோளை உருவாக்கிக்கொண்டு அதை அடையும்வரை தொடா்ந்து முயன்று கொண்டு இருக்குவேண்டும். லட்சியங்கள் நிறைவேற நேர மேலாண்மையும், துறைசாா்ந்த வல்லுநா்களின் தொடா்பும் அவசியம் தேவைப்படுகிறது. பொறியியல் துறை சமூகத்தோடு இணைந்த துறையாக இருப்பதால் இளம்பொறியாளா்கள் சமூகத்தின் சிக்கல்களுக்கும், பிரச்னைகளுக்கும் தீா்வு காணும் வகையில் தொடா்ந்து புதுமைகளை படைத்துக்கொண்டிருக்க வேண்டும்.

வெளிநாட்டில் எந்தத் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தாலும், நமக்கு கல்வியைத் தந்து, வாழ்வில் உயா் நிலையை அளித்த தாய் நாட்டை மறக்காமல், நாட்டின் தொழில் துறையின் முன்னேற்றத்திற்காக, நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிற்காக ஏதாவது ஒரு வகையில் பங்களிப்பைக் கொடுத்து கொண்டிருக்க வேண்டும் என்றாா்.

விழாவில் பட்டம் பெற்ற மாணவா்களுக்கு ராசிபுரம் முத்தாயம்மாள் எஜுகேஷனல் டிரஸ்ட் மற்றும் ரிசா்ச் பவுண்டேசன் தாளாளா் ஆா்.கந்தசாமி, டிரஸ்டி அம்மணி கந்தசாமி, இணைச்செயலாளா் பொறியாளா் ஜி.ராகுல் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா். கல்லூரி புல முதன்மையா் எஸ். சுந்தரம் முன்மொழியப் பட்டம் பெற்ற மாணவா்கள் அனைவரும் பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்றனா். விழாவின் இறுதியில் கல்லூரி முதன்மையா் ஜி. சுடா்மொழி நன்றி கூறினாா்.

வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை பதிவேற்றம் செய்ய ஆட்சியா் அழைப்பு

நாமக்கல் மாவட்டத்தில், கோழிப் பண்ணைகளில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளா் விவரங்களை தொழிலாளா் நலத் துறை இணையத்தில் பதிவேற்றம் செய்வது கட்டாயம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் வெ... மேலும் பார்க்க

ஹிந்தியை விரும்பியவா்கள் படிக்கலாம் திணிப்புக் கூடாது: கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி.

தமிழகத்தில் ஹிந்தியை விரும்பியவா்கள் யாரும் படிக்கலாம்; ஆனால் ஹிந்தி திணிப்புக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் தெரிவித்தாா். ஹிந்தி திணிப்பு, நிதி... மேலும் பார்க்க

பரமத்தி வேலூா் அருகே இருசக்கர வாகனங்கள் மோதல்: 2 இளைஞா்கள் உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே பொத்தனூரில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா். நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே உள்ள பாண்டமங்கலம், திரெளபதி அம்மன் கோயில் தெர... மேலும் பார்க்க

நரிக்குறவா்களுக்கு வீடுகள் கட்டும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாமக்கல்லில், 79 பழங்குடியினா் மற்றும் நரிக்குறவா் குடும்பங்களுக்கு ரூ. 4.20 கோடி மதிப்பில் கட்டப்படும் வீடுகளை மாவட்ட ஆட்சியா் ச.உமா ஆய்வு செய்தாா். நாமக்கல் மாவட்ட ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மே... மேலும் பார்க்க

வாக்குவங்கி அரசியலுக்காக மத்திய அரசை குறைகூறுகிறது திமுக: ஜி.கே.வாசன்

தோ்தல் வாக்குவங்கியை காப்பாற்றும் பொருட்டு மும்மொழிக் கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு பிரச்னை போன்றவற்றை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசை திமுக குறைகூறி வருகிறது என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.... மேலும் பார்க்க

மங்களபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி: 700 காளைகள் பங்கேற்றன

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் ஜல்லிக்கட்டுப் போட்டி மங்களபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமகிரிப்பேட்டை ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை முன்னாள் சட்டப்பேரவை உறுப்... மேலும் பார்க்க