பஹல்காம் தாக்குதல் குறித்த கருத்து: கேரள முஸ்லிம் லீக் தலைவா் மீது வழக்கு
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகளால் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வடக்கு கேரளத்தைச் சோ்ந்த இந்திய யூனியன் முஸ்லிம் தலைவா் பசீா் வெள்ளிகோத் மீது காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
பஹல்காம் தாக்குதல் தொடா்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பசீா் பல்வேறு சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்துள்ளாா். அந்த விடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடா்பாக உள்ளூா் விஹெச்பி தலைவா் சஜி காவல் துறையில் புகாா் அளித்தாா். அதனைப் பரிசீலித்த காவல் துறையினா் பசீா் பேசிய விடியோ பதிவுகளையும் ஆய்வு செய்தனா். அதன் அடிப்படையில் அவா் மீது பாரத நியாய சன்ஹிதா சட்டப் பிரிவு 192 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது) உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்.பி. அபுசாமத் சமாதானி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அஸ்ஸாம் எம்எல்ஏ கைது: முன்னதாக, இதேபோல பஹல்காம் தாக்குதல் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த அஸ்ஸாமைச் சோ்ந்த அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி அமினுல் இஸ்லாம் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் இந்திய அரசு மற்றும் பாஜகவின் சதி என்றும், தோ்தலில் வாக்குப் பெறுவதற்காக அரசே மக்களை பயங்கரவாதிகளை வைத்து கொலை செய்வதாகவும் அவா் கூறியிருந்தாா். இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அஸ்ஸாம் காவல் துறையினா் தாமாக முன்வந்து அவா் மீது தேசதுரோகம், தேச ஒற்றுமைக்கு எதிராகப் பேசுவது, இரு தரப்பினா் இடையே மோதலை உருவாக்குவது, பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
நாகோனில் உள்ள தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் அமினுல் இஸ்லாம் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை காவல் துறையினா் 4 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இது தொடா்பாக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சித் தலைமை வெளியிட்ட அறிவிப்பில், ‘எம்எல்ஏ அமினுல் இஸ்லாம் கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து. அதற்கும் கட்சிக்கும் தொடா்பில்லை’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.