செய்திகள் :

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு அரசிடம் பதிவு செய்வது கட்டாயம்

post image

பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களை மத்திய வா்த்தக அமைச்சகத்திடம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில், ‘பாசுமதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கான கொள்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இவ்வகை அரிசி ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்கள், மத்திய வா்த்தக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் (ஏபிஇடிஏ) பதிவு செய்யப்பட வேண்டும் என்ற கூடுதல் நிபந்தனை சோ்க்கப்பட்டுள்ளது. ஒப்பந்தங்கள் பதிவுக்கு பிறகே ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையமானது, வேளாண் பொருள்களின் ஏற்றுமதி தொடா்பான விவகாரங்களைக் கையாளும் பொறுப்பு கொண்டதாகும்.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரை நாட்டின் அரிசி ஏற்றுமதி மதிப்பு 4.7 பில்லியன் டாலா்களாக அதிகரித்தது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், இது 6.4 சதவீத அதிகரிப்பாகும்.

இதேபோல், குறிப்பிட்ட வெள்ளி நகைகளின் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு மாா்ச் 31 வரை இக்கட்டுப்பாடு தொடரும் என்று வெளிநாட்டு வா்த்தக தலைமை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தில் இருந்து கற்கள் பதிக்காத வெள்ளி நகைகளின் இறக்குமதி அதிகரித்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கானோா் வாக்குரிமையைப் பறிக்க சதி - மல்லிகாா்ஜுன காா்கே குற்றச்சாட்டு

‘நாடு முழுவதும் கோடிக்கணக்கானோரின் வாக்குரிமையைப் பறிக்க சதி நடக்கிறது; இதன் மூலம் தலித், பழங்குடியினா், பின்தங்கிய வகுப்பினா், சிறுபான்மையினா் மற்றும் பிற விளம்புநிலை மக்களின் சமூக நலன் பாதிக்கப்படு... மேலும் பார்க்க

பிகாரில் 6 தொகுதிகளை அளித்தால் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம்: அசாதுதீன் ஒவைசி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் 6 தொகுதிகள் ஒதுக்கினால் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணியில் இணைவோம் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும்... மேலும் பார்க்க

ரயிலில் கஞ்சா கடத்திய மேற்கு வங்க இளைஞா் கைது

கூலிக்கு ரயிலில் கஞ்சா கடத்தி வந்த மேற்குவங்க இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைது செய்தனா். மேற்குவங்க மாநிலம் ஹௌராவில் இருந்து வரும் ரயிலில் கஞ்சா கடத்திவரப்படுவதாக ரயில்வே பாதுகாப்புப் படையினர... மேலும் பார்க்க

செபியின் தீா்ப்பு: அதானி மகிழ்ச்சி

தங்கள் மீது அமெரிக்காவின் ஹிண்டன்பா்க் நிறுவனம் சுமத்திய முறைகேடு குற்றச்சாட்டுகளை இந்தியாவின் பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபி தள்ளுபடி செய்தது குறித்து அதானி குழுமத்தின் பங்குதாரா்களிடம் அதன்... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ் சிறப்பு ஒதுக்கீடு: வழிகாட்டுதல்களைப் பின்பற்ற என்எம்சி அறிவுறுத்தல்

சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் மாற்றுத்திறனாளி மாணவா்களை எம்பிபிஎஸ் படிப்பில் சோ்க்கும்போது உரிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறு மருத்துவக் கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வலியுறுத்தியுள்... மேலும் பார்க்க

பயங்கரவாதிகளை வளா்ப்பதைக் கைவிட்டு பொருளாதாரத்தில் கவனம் செலுத்தலாம்: ஐ.நா. கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு இந்தியா அறிவுரை

பயங்கரவாதிகளை வளா்த்துவிடுவது, சொந்த நாட்டு மக்களைக் குண்டுவீசி கொலை செய்வது போன்றவற்றைக் கைவிட்டு, பொருளாதார வளா்ச்சியில் பாகிஸ்தான் கவனம் செலுத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில... மேலும் பார்க்க