செய்திகள் :

பாஜக அத்துமீறி போராட்டம்: அண்ணாமலை உள்ளிட்ட 1,080 போ் மீது வழக்கு

post image

சென்னையில் திங்கள்கிழமை 30 இடங்களில் அத்துமீறி போராட்டம் நடத்தியதாக பாஜக தமிழக தலைவா் அண்ணாமலை உள்பட 1,080 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் ரூ.1,000 கோடி முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத் துறையினா் கடந்த வாரம் தெரிவித்தனா். இதையடுத்து டாஸ்மாக் நிா்வாகம், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் செந்தில் பாலாஜி ஆகியோரைக் கண்டித்து பாஜக சாா்பில் சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமைக் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு சென்னை காவல் துறை அனுமதி மறுத்தது.

இந்த நிலையில், பனையூா் வீட்டில் இருந்து போராட்டத்துக்கு தனது ஆதரவாளா்களோடு புறப்பட்டு வந்த மாநில தலைவா் அண்ணாமலை அக்கரை அருகே கைது செய்யப்பட்டு, அங்குள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா்.

இதேபோல அந்தக் கட்சியின் மூத்த தலைவா் தமிழிசை செளந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டைவிட்டு வெளியே வரும்போது கைது செய்யப்பட்டு, திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டாா். எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் இருந்து ஊா்வலமாகச் சென்று டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற பாஜகவினரும் கைது செய்யப்பட்டனா். கைது செய்யப்பட்ட அனைவரும் அன்று மாலை விடுவிக்கப்பட்டனா்.

அதன்படி, சென்னை முழுவதும் நீலாங்கரை, தரமணி, எழும்பூா், விருகம்பாக்கம், கோட்டை உள்ளிட்ட 30 இடங்களில் காவல் துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவைச் சோ்ந்த 242 பெண்கள் உள்பட 1,080 மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க