செய்திகள் :

'பாஜக-வோடு கூட்டணியை ஏற்கவில்லை' - ராஜினாமா கடிதம் அனுப்பிய அதிமுக நிர்வாகி

post image

தமிழகத்தில் வரும் 2026-ம் ஆண்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க தலைமையில் என்.டி.ஏ கூட்டணி போட்டியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தார். எடப்பாடி பழனிசாமியும் அமித் ஷாவோடு கைகோத்து, இந்த அறிவிப்பின் போது உடன் இருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமியின் இந்த முடிவு, அ.தி.மு.க கட்சிக்குள் ஆதரவையும், எதிர்ப்பையும் உருவாக்கியிருக்கிறது. இந்நிலையில், ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க சிறுபான்மையினர் பிரிவு நகர செயலாளர் கே.எஸ். முகமது கனி ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா
ADMK - BJP - எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா

அ.தி.மு.க புதுக்கோட்டை வடக்கு மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.விஜயபாஸ்கருக்கு அவர் எழுதியுள்ள கடித்ததில், ``பா.ஜ.க-வுடன் அ.தி.மு.க கூட்டணி வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்சியில் இருந்து விலகுவதாக” முகமது கனி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடித்தத்தில், 'மாவட்டச் செயலாளர் அவர்களுக்கு, நான் கடந்த 45 வருடங்களாக கழகத்தின் பல பொறுப்புகளிலிருந்து கழகப் பணியாற்றியுள்ளேன். சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பாசிச பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்ததை அடுத்த கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு மற்றும் அனைத்து பதவிகளிலிருந்தும் ராஜினாமா செய்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

letter

இதுகுறித்து, கே.எஸ்.முகமது கனியிடம் பேசினோம்.

"மாவட்டச் செயலாளர் சென்னையில் இருக்கிறார். நான் பதிவு தபால் மூலம் என் ராஜினாமா கடிதத்தை அவருக்கு அனுப்பியுள்ளேன். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக செயல்படும் பா.ஜ.க-வோடு அ.தி.மு.க கூட்டணி வைத்ததை விரும்பாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவில் உறுதியாக இருக்கிறேன்" என்றார்.

இழுத்தடித்த ஹைகோர்ட்; இரவோடு இரவாகத் தர்காவை இடித்த மகா அரசு; சுப்ரீம்கோர்ட் போட்ட தடை;என்ன நடந்தது?

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் ஹஸ்ரத் சாத்பீர் சயீத் பாபா என்ற தர்கா இருந்தது. இத்தர்கா சட்டவிரோதமானது என்று மும்பை உயர் நீதிமன்றம் கடந்த மாதம் 12ம் தேதி தெரிவித்து இருந்தது.இதையடுத்து தர்காவை இடிக்கக... மேலும் பார்க்க

Article 142 : `ஜக்தீப் தன்கரை நீக்க MP-க்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும்’ - பிரின்ஸ் கஜேந்திர பாபு

ஆளுநர் ஆர்.என். ரவிக்கெதிராக தமிழக அரசு தொடுத்த வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 8-ம் தேதி அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 142-ஐப் பயன்படுத்தி 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்து தீர்ப்பு வழங்கியது.அத... மேலும் பார்க்க

TVK : 'இந்தியாவுலயே பெரிய படை நம்மளோடதுதான்!' - ஐ.டி விங் கூட்டத்தில் விஜய் பேச்சு

'தவெக ஐ.டி விங்!'தவெகவின் ஐ.டி விங் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா மற்றும் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் மு... மேலும் பார்க்க

Waqf Bill: பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன 'போரா முஸ்லீம்கள்' - யார் இவர்கள்?

மத்திய பாஜக அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வக்பு சட்ட திருத்த மசோதா நாடுமுழுவதும் பல்வேறு தரப்பினரிடையே எதிர்ப்புகளைச் சந்தித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இஸ்லாமியர் அமைப்புகள் வக்... மேலும் பார்க்க

"என் தந்தைக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர்..." - மதிமுக பொறுப்பிலிருந்து துரை வைகோ விலகல்

மதிமுக நிர்வாக குழு கூட்டம் நாளை (ஏப்ரல் 20) சென்னையில் நடைபெறும் நிலையில், கட்சியின் முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக வைகோவின் மகனும், திருச்சி எம்.பி-யுமான துரை வைகோ அறிக்கை வெளியிட்டிர... மேலும் பார்க்க