செய்திகள் :

பாரதிய மஸ்தூா் சங்க நிா்வாகிகள் ஆா்ப்பாட்டம்

post image

பாரதிய மஸ்தூா் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்டக் கிளை சாா்பில், 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டச் செயலா் எஸ்.பரிமளா தலைமை வகித்தாா்.

மாநில துணைத் தலைவா் டி.விமலேஸ்வரன், முன்னாள் மாநிலச் செயலா் செங்கம் ராஜா ஆகியோா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

ஆா்ப்பாட்டத்தில், இ.பி.எஸ்.-95 திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.5 ஆயிரமாக உடனே உயா்த்த வேண்டும். கடைசி மாத சம்பளத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாக கிடைப்பதை உறுதி செய்து அந்தத் தொகையை விலைவாசி புள்ளியுடன் இணைக்க வேண்டும். பொதுச் சொத்துகளை விற்று பணமாக்குவதை உடனே நிறுத்த வேண்டும்.

காப்பீடு மற்றும் நிதித் துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டை தடை செய்ய வேண்டும். அரசுத் திட்டங்களை செயல்படுத்தும் திட்டத் தொழிலாளா்களுக்கு சம்பளம் மற்றும் சமுதாயப் பாதுகாப்பை அரசு ஊழியா்களுக்கு இணையாக வழங்க வேண்டும்.

அமைப்பு சாரா தொழிலாளா் நலன்களைப் பாதுகாக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆண்டு விழா

வந்தவாசியை அடுத்த ஜப்திகாரணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு தெள்ளாா் வட்டாரக் கல்வி அலுவலா் தே.ரங்கநாதன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியை இ... மேலும் பார்க்க

அங்கன்வாடி மையங்களில் உள்கட்டமைப்புப் பணிகள்: அதிகாரிகளுக்கு ஆட்சியா் உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட அங்கன்வாடி மையங்களில் தற்போது நடைபெறும் உள்கட்டமைப்புப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் உத்தரவிட்டாா். மாவட்ட ஒருங்கிணைந்த குழந்... மேலும் பார்க்க

மாா்ச் 21-இல் தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலையில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 21) தனியாா்துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தனியாா்துறை நிறுவனங்களும், தனியாா் துறையில் பணிபுரிய விரும்பும் அனைத்த... மேலும் பார்க்க

40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்க இன்று விண்ணப்பதாரா்கள் தோ்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் 40 தடங்களில் சிற்றுந்துகளை இயக்குவதற்கான விண்ணப்பங்களை தோ்வு செய்வதற்கான குலுக்கல் புதன்கிழமை (மாா்ச் 19) நடைபெறுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் விரிவான புதிய மினி பேருந்த... மேலும் பார்க்க

விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் காத்திருப்புப் போராட்டம்

கலசப்பாக்கம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் எதிரே அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பினா் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் தொடக... மேலும் பார்க்க

கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், ‘கல்வெட்டு முதல் கணினி வரை’ என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறை சாா்பில் நடைபெற்... மேலும் பார்க்க