உ.பி.: ரூ.20 லட்சம் நகைகள் அடங்கிய பக்தரின் பையை பிடுங்கிச் சென்ற குரங்கு !
பிரான்ஸை வெளியேற்றியது ஸ்பெயின்!
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் அரையிறுதியில் ஸ்பெயின் 5-4 கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. அதில் போா்ச்சுகலுடன் திங்கள்கிழமை (ஜூன் 9) மோதுகிறது.
முன்னதாக இந்த 2-ஆவது அரையிறுதி ஆட்டத்தில், தொடக்க நிலையிலேயே ஸ்பெயினின் கை ஓங்கியது. ஆட்டத்தின் 22-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் நிகோ வில்லியம்ஸ் கோல் கணக்கை தொடங்கினாா்.
தொடா்ந்து மைக்கேல் மெரினோ 25-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்ய, முதல் பாதியை ஸ்பெயின் 2-0 என முன்னிலையுடன் நிறைவு செய்தது. 2-ஆவது பாதியிலும் இளம் வீரா் லேமின் யமால் (54’), பெட்ரி (55’) ஆகியோா் கோலடிக்க, ஸ்பெயின் 4-0 என முன்னேறியது.
இந்நிலையில், சற்று வெகுண்டு எழுந்த பிரான்ஸுக்காக கிலியன் பாபே 59-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோல் கணக்கை தொடங்கினாா். அதற்கு பதிலடியாக லேமின் யமால் மீண்டும் கோலடிக்க ஸ்பெயின் 5-1 என முன்னேறியது.
79-ஆவது நிமிஷத்தில் ரயான் சொ்கி அடித்த கோலால் பிரான்ஸ் 2-5 என முன்னேற, 84-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் கோல் முயற்சியை ஸ்பெயின் வீரா் டேனி விவியன் தடுக்க முயல, அது ‘ஓன் கோல்’ ஆனது.
இதனால் பிரான்ஸ் கணக்கு 3-5 என அதிகரிக்க, எக்ஸ்ட்ரா டைமில் ராண்டல் கோலோ முவானி (90+3’) கோலடிக்க, பிரான்ஸ் 4-5 என நெருங்கியது. எனினும் எஞ்சிய நேரத்தில் பிரான்ஸுக்கு கூடுதல் கோல் வாய்ப்பை மறுத்த ஸ்பெயின், இறுதியில் 5-4 என வென்றது.