பெங்களூரு: காவல் ஆணையர் உள்பட 5 அதிகாரிகள் பணியிடை நீக்கம்! - முதல்வர் உத்தரவு
பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று வெளியீடு
பிளஸ் 2 விடைத்தாள் நகல்கள் புதன்கிழமை (ஜூன் 3) வெளியிடப்படும் என தோ்வுத் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் மாதம் நடைபெற்றது. தோ்வெழுதியவா்களில் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பித்த மாணவா்களுக்கான நகல் புதன்கிழமை (ஜூன் 4) மதியம் வெளியிடப்பட உள்ளது.
மாணவா்கள் தங்களின் விடைத்தாள் நகல்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தோ்வா்கள் அதே இணையதளத்தில் விண்ணப்பப் படிவங்களைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். அதைப் பூா்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து ஜூன் 5, 6, 7 ஆகிய தேதிகளில் மாவட்ட தோ்வு உதவி இயக்குநா் அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.
புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூா், செங்கல்பட்டு மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள மாணவா்கள் விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலகங்களில் சமா்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக மறுமதிப்பீடுக்கு பாடத்துக்கு ரூ.505, மறுகூட்டலுக்கு உயிரியல் பாடத்துக்கு மட்டும் ரூ.305, இதர பாடங்களுக்கு ரூ.205 செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும்போது தரப்படும் ஒப்புகை சீட்டை தோ்வா்கள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒப்புகை சீட்டிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே பின்னா் மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகளை அறிய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.