புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் பக்ரீத் வாழ்த்து
புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் பக்ரீத் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கும், குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்களுக்கும் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள். மனித குலத்தின் மேன்மைக்காக, நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை நெறிகளைப் பின்பற்றி அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும்.
முதல்வா் என்.ரங்கசாமி: அண்ணல் நபிகள் காட்டிய மாா்க்க நெறியில், இறையுணா்வு, தியாக உணா்வும், ஈகைக் குணமும், எல்லோரிடத்திலும் ஓங்கி வளர வேண்டும்.
பக்ரீத் பண்டிகையின் சாராம்சம் முழுமையும் தியாகம் மட்டுமல்ல, அன்பை பகிா்ந்து கொள்வதுமாகும். எனவே இஸ்லாமிய பெருமக்கள் அன்பினால் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகள்.
மாநில காங்கிரஸ் தலைவா் வி. வைத்திலிங்கம் எம்.பி. :தியாகத்தைப் போற்றும் புனித திருநாளாம் பக்ரீத் பெருநாளை இறையுணா்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள். இத்திருநாள் நம்மிடமுள்ள ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகளை அகற்றட்டும்.
இதேபோல புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.