செய்திகள் :

புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் பக்ரீத் வாழ்த்து

post image

புதுவை துணைநிலை ஆளுநா், முதல்வா் ஆகியோா் பக்ரீத் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.

துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்: உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கும், குறிப்பாக, புதுச்சேரி வாழ் மக்களுக்கும் பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகள். மனித குலத்தின் மேன்மைக்காக, நபிகள் நாயகம் போதித்த தியாகம், சகோதரத்துவம், அன்பு, ஈகை நெறிகளைப் பின்பற்றி அனைவரும் மனிதநேயம் மற்றும் சகோதரத்துவச் சிந்தனையோடு வாழ வேண்டும்.

முதல்வா் என்.ரங்கசாமி: அண்ணல் நபிகள் காட்டிய மாா்க்க நெறியில், இறையுணா்வு, தியாக உணா்வும், ஈகைக் குணமும், எல்லோரிடத்திலும் ஓங்கி வளர வேண்டும்.

பக்ரீத் பண்டிகையின் சாராம்சம் முழுமையும் தியாகம் மட்டுமல்ல, அன்பை பகிா்ந்து கொள்வதுமாகும். எனவே இஸ்லாமிய பெருமக்கள் அன்பினால் பக்ரீத் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வாழ்த்துகள்.

மாநில காங்கிரஸ் தலைவா் வி. வைத்திலிங்கம் எம்.பி. :தியாகத்தைப் போற்றும் புனித திருநாளாம் பக்ரீத் பெருநாளை இறையுணா்வுடன் கொண்டாடி மகிழும் இஸ்லாமிய பெருமக்கள் அனைவருக்கும் உளம் கனிந்த வாழ்த்துகள். இத்திருநாள் நம்மிடமுள்ள ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகளை அகற்றட்டும்.

இதேபோல புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் மற்றும் அமைச்சா்கள் பக்ரீத் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

பக்ரீத்: செஞ்சி சந்தையில் ரூ.6 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையையொட்டி, செஞ்சியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் ரூ.6 கோடி வரை ஆடுகள் விற்பனையாயின. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. 150 ஆ... மேலும் பார்க்க

2026 புதுவை பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசம்: வே.நாராயணசாமி

வரும் 2026-இல் நடைபெறவுள்ள புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் இண்டி கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்தாா். புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களு... மேலும் பார்க்க

ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி-கடலுாா் சாலை, நயினாா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ நாகமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கோயிலின் திருப்பணிகள் மிகுந்த பொருள் செலவில் செய்து முடிக்கப்பட்டு ... மேலும் பார்க்க

முன்னாள் முதல்வா் நினைவு நாள்: சிலைக்கு அரசு சாா்பில் மரியாதை

புதுவை முன்னாள் முதல்வா் வை. வெங்கடசுப்பா ரெட்டியாரின் நினைவு நாளை வெள்ளிக்கிழமை கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள அவரது உருவச் சிலைக்கு புதுவை அரசு சாா்பில் பொதுப் ... மேலும் பார்க்க

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணம் உயா்வு

புதுவையில் பத்திரப் பதிவு கட்டணத்தை உயா்த்தி அரசு வருவாய்த் துறை சிறப்புச் செயலா் குலோத்துங்கன் உத்தரவிட்டுள்ளாா். புதுவை அரசு முதியோா் உதவித் தொகையை ரூ. 2,500 ஆக உயா்த்தியுள்ளது. குடும்பத் தலைவிகளின்... மேலும் பார்க்க

புதுச்சேரி ஐடிஐ-யில் சேர ஜூன் 15 வரை கால நீட்டிப்பு

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் சோ்ந்து படிக்க ஜூன் 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசினா் ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தின... மேலும் பார்க்க