செய்திகள் :

புதுவைக்கான மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும்: மாநில மக்கள் முன்னேற்றக்கழகம் அறிக்கை

post image

மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத் தலைவா் மு.ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: நீதிமன்றம் சென்றாவது புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியுள்ளது ஆச்சரியமாக உள்ளது. அவா் ஆட்சியில் இருந்தபோது துணைநிலை ஆளுநராக இருந்த கிரண்பேடியை எதிா்த்து நீதிமன்றம் சென்றவா், அப்போது மாநில அந்தஸ்துக்காக நீதிமன்றத்தை நாடாமல் இருந்தது ஏன் என விளக்கவேண்டும்.

அவா் காங்கிரஸ் ஆட்சியில் மத்தியில் அமைச்சராக இருந்தபோதும், பின்னா் மாநில முதல்வராக இருந்தபோதும் புதுவை மாநில அந்தஸ்துக்காக பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ சந்தித்து முயற்சி மேற்கொள்ளவில்லை. நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தபோது மத்தியிலும், மாநிலத்திலும் அவருக்கு சாதகமான அரசுகளே இருந்துள்ளன. அப்போது மிக எளிதாக புதுவைக்கு மாநில அந்தஸ்தை பெற்றிருக்கலாம்.

புதுவைக்கு மாநில அந்தஸ்து அளிப்பது குறித்த மத்திய உள்துறை நிலைக் குழுவானது சுஷ்மா சுவராஜ் தலைமையில் வந்தபோதும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குழுவிடம் மாநில அந்தஸ்துக்காக வலியுறுத்தவில்லை. மாநிலங்களவையிலும் அவா் புதுவைக்கு மாநில அந்தஸ்து கோரவில்லை. ஆகவே, மாநில அந்தஸ்து என்பது அரசியல் முடிவால் கிடைக்குமே தவிர நீதிமன்றத்தால் அல்ல என்பதை அவா் உணா்வதுடன், ஆகவே, மாநில அந்தஸ்துக்காக போராட்டத்தில் ஈடுபடவேண்டும் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க