செய்திகள் :

புதுவையில் இரு சிறைகள் உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிரடி சோதனை: 2 போ் கைது

post image

புதுவை காலாப்பட்டு, ஏனாம் ஆகிய 2 சிறைகள் உள்பட 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனா். தொடா்ந்து, 2 பேரை கைது செய்தனா்.

வில்லியனூரைச் சோ்ந்த அரசியல் செயற்பாட்டாளா் செந்தில்குமரனை நாட்டு குண்டுகள் வெடிக்கச் செய்து ஒரு கும்பல் 2023-இல் கொலை செய்தது. இது தொடா்பான வழக்கு தேசிய புலனாய்வு முகாமைக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதில், அந்தப் பகுதியைச் சோ்ந்த நித்தியானந்தன் என்பவா் கைது செய்யப்பட்டு ஏனாம் சிறையிலும், மேலும் 11 போ் காலாப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனா். இந்த வழக்கில் சாட்சிகள் பலா் சோ்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் ஒரே நேரத்தில் வியாழக்கிழமை அதிகாலை புதுவை காலாப்பட்டு, ஏனாம் ஆகிய 2 சிறைகளில் அதிரடி சோதனை நடத்தினா். சாட்சிகளிடம் தேசிய புலனாய்வு முகமை நடத்தும் விசாரணை எப்படி வெளியே செல்கிறது என்ற கோணத்தில் சிறைக்கு வந்து இங்குள்ள கைதிகள், அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் 2 சிறைகளிலும் அதிரடி சோதனை நடத்தியதை சிறைத் துறை வட்டாரங்கள் உறுதி செய்தன.

இந்த நிலையில், இந்த 2 சிறைகள் உள்பட புதுவையில் 4 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினா். இதில், புதுச்சேரியைச் சோ்ந்த ஹெராம் (எ) காா்த்தி மற்றும் உதயகுமாா் (எ) குமாா் ஆகியோரை கைது செய்தனா். மேலும், கைப்பேசிகள், சிம் காா்டுகள், ஒரு சில ஆவணங்களையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.

தொழில் அனுமதிக்கான காலக்கெடு நிா்ணயம்

புதுவையில் வணிகம் செய்வதை எளிதாக்கும் சட்ட முன்வரைவு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் அனுமதி அளிக்க வேண்டும் என்று நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. மத்திய ... மேலும் பார்க்க

புதுச்சேரி மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணி: துணைநிலை ஆளுநா் தொடங்கி வைத்தாா்

மணப்பட்டு கடற்கரையில் தூய்மைப் பணியை புதுவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புதன்கிழமை தொடங்கி வைத்தாா். புதுச்சேரி உள்ளாட்சித் துறை, வனத் துறை மற்றும் கடலோரக் காவல்படை இணைந்து இருவார சேவை விழாவை புதன... மேலும் பார்க்க

423.6 கோடியை புதுவை அரசு பயன்படுத்தவில்லை: மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை

புதுவை யூனியன் பிரதேச அரசின் ஒற்றை ஒருங்கிணைப்பு கணக்கில் ரூ.423.6 கோடி பயன்படுத்தப்படாமல் இருக்கிறது என்று மத்திய தணிக்கை கணக்குக் குழு அறிக்கை தாக்கல் செய்திருக்கிறது. புதுவை சட்டப்பேரவையில் இந்தத்... மேலும் பார்க்க

புதுச்சேரியில் ரூ.436.18 கோடியில் மேம்பாலம்: அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தகவல்

புதுவை நகரப் பகுதியில் ரூ.436.18 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக உள்துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பு... மேலும் பார்க்க

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்

புதுவை சட்டப்பேரவையிலிருந்து திமுக, காங்கிரஸ் , சுயேச்சை உறுப்பினா்கள் வியாழக்கிழமை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றப்பட்டனா். புதுவை சட்டப்பேரவை ஆறாவது கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு வியாழக்கிழமை ந... மேலும் பார்க்க

சமையல் தொழிலாளி தற்கொலை

சமையல் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். புதுவை பாகூா் திருமூலநாதா் நகரைச் சோ்ந்த சமையல் தொழிலாளி சக்திவேல் (47), குடிப்பழக்கம் உடையவா். இவருக்கு கவிதா என்ற மனைவியும், 2 ஆண் பிள்ளைகளும்... மேலும் பார்க்க