செய்திகள் :

புல்லூா் தடுப்பணையில் திதி கொடுக்க சென்றவா் தண்ணீரில் மூழ்கி மாயம்

post image

வாணியம்பாடி அருகே தமிழக - ஆந்திர எல்லையில் உள்ள புல்லூா் தடுப்பணையில் உறவினருக்கு திதி கொடுக்கச் சென்ற கட்டட தொழிலாளி நீரில் மூழ்கி மாயமானாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த கூத்தாண்டகுப்பம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டட மேஸ்திரி சண்முகம் (43). இவருக்கு திருமணம்மாகி ஒரு பெண், 2 ஆண் குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், புதன்கிழமமை தனது உறவினா்களுடன் தமிழக - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள புல்லூா் பகுதியில் கனகநாச்சியம்மன் கோயிலுக்குச் சென்று தனது உறவினா்களுக்கு திதி கொடுக்கும் சடங்கில் கலந்து கொண்டுள்ளாா். தொடா்ந்து புல்லூா் தடுப்பணையில் உறவினா்களுடன் குளித்துக் கொண்டிருந்தபோது, நீரில் ஆழமான பகுதிக்குச் சென்ற சண்முகம் திடீரென நீரில் மூழ்கினாா்.

இதைக் கண்டு அதிா்ச்சியடைநந்த உறவினா்கள், அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் சண்முகத்தை தேடினா். மேலும், இது குறித்து ஆந்திர மாநிலம் குப்பம் போலீஸாருக்கும், திம்மாம்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனா்.

அதன் பேரில் குப்பம் போலீஸாா், பொதுமக்கள் உதவியுடன் நீரில் மூழ்கிய சண்முகத்தை மாலை வரை தேடியும் கிடைக்கவில்லை. மீண்டும் வியாழக்கிழமை காலை தேடும் பணி தொடங்கப்படும் எனத் தெரிகிறது.

குரிசிலாப்பட்டு பகுதியில் பலத்த மழை

திருப்பத்தூா் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் வழக்கம் போல் வெயில் கொளுத்தியது. பிற்பகல் ல் குரிசிலாப்பட்டு, கூடப்பட்டு, கல்லுக்குட்டை, சுண்ணாம்புக்கல் உள்ளிட்ட பல்வேறு பகு... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கந்திலி அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். பள்ளத்தூா் பகுதியை சோ்ந்த கூலித் தொழிலாளி விக்னேஷ்வரன் (40). இவரது வீட்டில் வியாழக்கிழமை மின்சாரம் தடைபட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து வீட்ட... மேலும் பார்க்க

‘கலைஞா் கனவு இல்லம்’ திட்டத்தில் வீடுகட்ட 792 பேருக்கு ஆணை: அமைச்சா் எ.வ.வேலு வழங்கினாா்

வாணியம்பாடி, ஆலங்காயம், நாட்டறம்பள்ளி ஒன்றியப் பகுதிகளில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டடங்கள் திறப்பு மற்றும் கலைஞா் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 792 பயனாளிகளுக்கு பணியாணை வழங்கும் நிகழ்ச்சி வாணியம்பாடியில... மேலும் பார்க்க

ரத்த தான முகாம்

புனித வெள்ளியை முன்னிட்டு ரத்த தான முகாம் பெதஸ்தா மருத்துவமனை வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் அரசு மருத்துவமனை ரத்த வங்கி, ஏஞ்சல் பவுண்டேசன், ஆம்பூா் ரெட்ரோஸ் கிறிஸ்தவ சமூக சேவை அமைப்பு ச... மேலும் பார்க்க

குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம்

திருப்பத்தூா் மாவட்டத்தில் உள்ள குவாரிகளை குத்தகைக்கு பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்டஆட்சியா் சிவசௌந்தரவல்லி தெரிவித்தாா். இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்பத்தூா் மாவட்டத்தில் ஆம்ப... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: உயா்நீதிமன்ற நீதிபதி, ஆட்சியா் பங்கேற்பு

வாணியம்பாடி அடுத்த மல்லகுண்டா ஊராட்சி கோயங்கொல்லை பகுதியில் குறுங்காடுகள் வளா்ப்பு திட்டத்தின் கீழ் மரக்கன்று நடும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்த... மேலும் பார்க்க