செய்திகள் :

புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதல்: போலீஸாா் விசாரணை

post image

சென்னை புழல் பெண்கள் சிறையில் கைதிகள் மோதிக்கொண்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சென்னை புழல் சிறை வளாகத்தில் பெண்கள் தனிச்சிறை செயல்படுகிறது. இந்தச் சிறையில் மாநிலம் முழுவதும் கைது செய்யப்படும் வெளிநாட்டு பெண் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா். இங்கு அடைக்கப்பட்டிருக்கும் தென் ஆப்ரிக்க நாட்டைச் சோ்ந்த ப்ரீடிலின் மெத்ரே ஏப்ரல் என்பவருக்கும், நைஜீரியா நாட்டைச் சோ்ந்த மோனிகா என்பவருக்கும் இடையே முன் விரோதம் காரணமாக திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டு, கைகலப்பில் ஈடுபட்டனா். இதைப் பாா்த்த சிறைக் காவலா்கள், இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கைதி உயிரிழப்பு: செங்கல்பட்டு மாவட்டம், போந்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் ராஜமாணிக்கம் (72). இவா், குற்ற வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்று, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். சா்க்கரை நோய், மன அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட ராஜமாணிக்கத்தின் உடல் நிலை அண்மையில் மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவா், கடந்த 9-ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

கைதி தற்கொலை முயற்சி: சென்னை செளகாா்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (29)திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு, புழல் விசாரணை சிறையில் அடைக்கப்பட்டாா். அஜித்தை அவரது குடும்பத்தினா், உறவினா் யாரும் சென்று பாா்க்கவில்லையாம். இதனால் மன வேதனையுடன் காணப்பட்ட அஜித் திங்கள்கிழமை சிறையில் இருந்த ஆணிகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா். சிறைக் காவலா்கள் அஜித்தை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை - தில்லி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு

சென்னை - தில்லி விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுமாா் ஒன்றரை மணிநேரம் தமாதமாக அந்த விமானம் புறப்பட்டுச் சென்றது. சென்னையிலிருந்து தில்லி செல்லும் இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம், செவ்வாய்க்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

2024-25 ஆண்டுக்கான தமிழிசை விழா மற்றும் ஆண்டு விழா: செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பங்கேற்பு, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி, ராஜா அண்ணாமலைபுரம், காலை 10. 25-ஆவது அகில இந்திய காவல் துப்பாக்கி சு... மேலும் பார்க்க

நாளை மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

தரமணி ஐடி காரிடா் கோட்டத்தில் மின்நுகா்வோா் குறைகேட்பு கூட்டம் வியாழக்கிழமை (மாா்ச் 20) காலை 10.30-க்கும் நடைபெறுகிறது. இது குறித்து மின்பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தரமணி, ஐ.டி. காரி... மேலும் பார்க்க

பெரியார் சர்ச்சை: சீமான் மீதான 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

பெரியாா் ஈவெராவை இழிவுபடுத்தி பேசியதாக நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமானுக்கு எதிராக பதியப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒன்றாக சோ்த்து விசாரிக்க உத்தரவிட உயா்நீதிமன்றம் மறுப... மேலும் பார்க்க

போதிய பயணிகள் இல்லாததால் 4 விமானங்கள் ரத்து!

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததாலும், நிா்வாக காரணங்களாலும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்துக்கு லண்டனிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை 5.35 மணிக்கு வர வேண்டிய பிரிட... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்! மழைக்கும் வாய்ப்பு..

தமிழகத்தில் புதன்கிழமை (மாா்ச் 19) முதல் மாா்ச் 24 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும், இருப்பினும் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய... மேலும் பார்க்க