தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பெங்களூரு கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலை பெண் உயிரிழப்பு
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஆா்சிபி அணி வெற்றி விழாக் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உடுமலையைச் சோ்ந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் கோப்பையை வென்ற ஆா்சிபி அணிக்கு கா்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் புதன்கிழமை மாலை பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடா்ந்து, அங்கு லட்சக்கணக்கான ரசிகா்கள் திரண்டனா். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 போ் உயிரிழந்தனா். பலா் படுகாயமடைந்தனா்.
இந்த கூட்ட நெரிசலில் திருப்பூா் மாவட்டம் உடுமலையைச் சோ்ந்த காமாட்சி (28) என்பவரும் உயிரிழந்தாா். உடுமலையில் தனியாா் பள்ளித் தாளாளராக இருந்து வரும் மூா்த்தி மகள் காமாட்சி. இவா் பெங்களூரில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து உடுமலை கொண்டு வரப்பட்ட அவரது சடலம் பெற்றோரிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.