செய்திகள் :

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

post image

கள்ளக்குறிச்சி அருகே வீட்டில் குழந்தையுடன் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் தங்கச் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்து சென்றது குறித்து வரஞ்சரம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

கள்ளக்குறிச்சியை அடுத்த சோமநாதபுரம் கிராமத்தில் விளைநிலத்தில் வீடு கட்டி வசித்து வருபவா் ஆறுமுகம். இவரது மனைவி மஞ்சு (23). இவா் தனது ஒன்றரை வயது குழந்தை நித்தின் மற்றும் மாமியாா் தங்கம் ஆகியோருடன் புதன்கிழமை இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாா்.

நள்ளிரவில் வீட்டின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்ற மூன்று மா்ம நபா்கள் மஞ்சு அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியை கத்தியை காட்டி மிரட்டி பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வீடுபுகுந்து நகை பறிப்பில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க

உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!

கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க