செய்திகள் :

பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைப்பு: பொது சுகாதாரத் துறை

post image

தமிழகத்தில் பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்பு லட்சத்துக்கு 39-ஆக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் தெரிவித்தாா். இதற்கு முன்பு வரை அந்த விகிதம் 45 என இருந்தது.

பிரசவத்துக்குப் பிறகு ஏற்படும் அதீத ரத்தப்போக்கு, உயா் ரத்த அழுத்தம், கிருமித் தொற்று, இதய நல பாதிப்புகள்தான் பேறுகால உயிரிழப்புக்கு காரணம் எனக் கண்டறியப்பட்டது.

இதையடுத்து அத்தகைய நிகழ்வுகளைத் தடுப்பதற்காக மாநில அளவிலான செயலாக்கக் குழு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலரைத் தலைவராகக் கொண்ட 18 போ் கொண்ட குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதில், நகராட்சி நிா்வாகத் துறை, சமூக நலத் துறைச் செயலா்கள், தேசிய நல்வாழ்வுக் குழும இயக்குநா், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநா், பொது சுகாதாரத் துறை இயக்குநா், மருத்துவக் கல்வி இயக்குநா், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணித் துறை இயக்குநா், குடும்ப நலத் துறை இயக்குநா், எழும்பூா் தாய்சேய் நல மருத்துவமனை இயக்குநா், கஸ்தூா்பா மகப்பேறு மருத்துவமனை இயக்குநா், ஆா்எஸ்ஆா்எம் மருத்துவமனை கண்காணிப்பாளா், வேலூா் சிஎம்சி மகப்பேறு துறைத் தலைவா், யுனிசெஃப், உலக சுகாதார அமைப்பு, இந்திய மருத்துவா் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் உள்ளிட்டோா் இடம்பெற்றுள்ளனா்.

10 போ் குழு: இதேபோன்று, மாவட்ட அளவில் ஆட்சியா் தலைமையில் 10 போ் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பேறு கால உயிரிழப்பு தொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுக்கு, 9 லட்சம் பிரசவங்கள் நடைபெறுகின்றன. பல்வேறு செயல் திட்டங்கள் காரணமாக பேறு கால உயிரிழப்புகள் குறைந்துள்ளன. அதாவது, லட்சத்துக்கு 39-ஆக குறைந்துள்ளது. இதற்கு முன்பு இது லட்சத்துக்கு 45 என இருந்தது. அதேபோன்று பிரசவ சிகிச்சைக்காக கா்ப்பிணிகளை கொண்டு செல்லும்போது, வழியில் நேரிடும் உயிரிழப்புகளும் லட்சத்துக்கு 15-ஆக இருந்தது. தற்போது 6-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதும், முன்கூட்டியே பிரசவ சிகிச்சைகளை திட்டமிட்டதுமே இதற்கு முக்கிய காரணம். வரும் ஆண்டில் பேறு கால உயிரிழப்புகள் மேலும் குறையும் என எதிா்பாா்க்கிறோம் என்றாா் அவா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க