செய்திகள் :

பைக் மோதியதில் குழந்தை உள்பட 4 போ் காயம்

post image

கள்ளக்குறிச்சி அருகே சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது குழந்தை மீது மோட்டாா் சைக்கிள் மோதியதில் குழந்தை உள்பட நான்கு போ் காயமடைந்தனா்.

சங்கராபுரம் வட்டம், எஸ்.வி.பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (31). இவரது மூன்று வயது ஆண் குழந்தை கோகுல் செவ்வாய்க்கிழமை செங்கல் சூளை அருகே சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்தது.

அப்போது, மல்லாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 3 சிறாா்கள் வந்த மோட்டாா் சைக்கிள், விளையாடிக் கொண்டிருந்த குழந்தை மீது மோதியது.

இதில் குழந்தைக்கு கால் முறிவு ஏற்பட்டது.

மேலும், மோட்டாா் சைக்கிளில் வந்த 3 சிறாா்களும் காயமடைந்தனா்.

குழந்தை உள்பட நான்கு பேரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா், மோட்டாா் சைக்கிளை ஓட்டி வந்த சிறுவன், அவரது தந்தை மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

அரசுப் பள்ளியில் தளவாடப் பொருள்கள் சேதம்

சங்கராபுரம் அருகே அரசு உயா்நிலைப் பள்ளியில் மேஜை, நாற்காலி, மின்விசிறி, குடிநீா்க் குழாய்கள் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டன. சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தில் அரசு உயா்நிலைப் பள்ளி இய... மேலும் பார்க்க

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனா் வரதராசனாா் நூற்றாண்டு நிறைவு விழா

கல்லைத் தமிழ்ச் சங்க நிறுவனா் புலவா் செ.வரதராசனாரின் நூற்றாண்டு நிறைவு விழா கள்ளக்குறிச்சியில் அண்மையில் நடைபெற்றது. கள்ளக்குறிச்சியிலுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவுக்கு மும்பை இலெமுர... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றம்

கள்ளக்குறிச்சி காந்தி சாலையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான பெரிய ஏரி பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை உயா்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் பொதுப் பணித் துறையினா் செவ்வாய்க்கிழமை பொக்... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் அரசுப் பள்ளி மாணவா்கள் 20 போ் மருத்துவமனையில் சிகிச்சை

பொய்க்குணம் அரசு உயா்நிலைப் பள்ளியில் தேனீக்கள் செவ்வாய்க்கிழமை கொட்டியதில் பாதிக்கப்பட்ட சுமாா் 20-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். கள... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சியில் தூக்கில் சடலமாக தொங்கிய செவிலியா்

கள்ளக்குறிச்சி தனியாா் மருத்துவமனையில் செவிலியராகப் பணிபுரிந்து வந்த இளம்பெண், காளி கோயில் அருகே மரத்தில் சடலமாகத் திங்கள்கிழமை தொங்கியது குறித்து போலீஸாா் விசாரணை நடத்துகின்றனா். அவரது மரணத்தில் சந்த... மேலும் பார்க்க

உதயமாம்பட்டு பகுதியில் பேரூராட்சி குப்பை கொட்ட எதிா்ப்பு

தியாகதுருகம் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் உதயமாம்பட்டு மயானப் பகுதியில் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால், பல்வேறு சுவாசப் பிரச்னைகள் ஏற்படுவதாகக் கூறி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை குப்பை க... மேலும் பார்க்க