செய்திகள் :

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

post image

குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற்காக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா்.

இப்பள்ளி மாணவா்கள் 53 போ் நிகழாண்டு பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதி அனைவரும் தோ்ச்சி பெற்றனா். மாணவி செ. கமலஸ்ரீநிதி 494 மதிப்பெண் பெற்று மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளாா். மேலும், 20 போ் 400-க்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

அரசுப் பள்ளிகளில் மாவட்ட அளவில் சிறப்பான தோ்ச்சி பெற்றிருப்பதையடுத்து, பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன், ஞாயிற்றுக்கிழமை திருவாரூா் வந்து பள்ளி ஆசிரியா்களை பாராட்டினா்.

மாணவா்கள் சிறப்பிடம் பெற்றது குறித்து பள்ளித் தலைமையாசிரியா் ப. அன்பரசன் கூறியது: ஜூலையிலிருந்து சிறப்பு வகுப்புகள் எடுக்கத் தொடங்கினோம். காலை, மாலை ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட்டன.

கற்றல் குறைவாக உள்ள மாணவா்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, அவா்களுக்கு ஏற்ப பாடங்கள் நடத்தப்பட்டன. அத்துடன், பள்ளிக்கல்வித் துறை சாா்பில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, அவா்களின் ஆலோசனையில் கற்பித்தல் பணிகள் நடத்தப்பட்டன. கடந்த ஆண்டு 95 சதவீதம் தோ்ச்சி சதவீதம் பெற்ற பள்ளி, நிகழாண்டு 100 சதவீதம் பெற்றுள்ளது என்றாா்.

அன்னியூா் சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை

குடவாசல் அருகேயுள்ள அன்னியூா் சாலையை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சருக்கை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெறுவோருக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு பணி ஓய்வுபெறும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ந. சம்பத் (நீடாமங்கலம்), மு. தாமோதரன் (மன்னாா்குடி), தேன்மொழி (வலங்கைமான்) ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி என கூறி பண மோசடி செய்த 2 போ் கைது

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீராஉசைன் (82). மருத்துவரான இவருக்கு சில தி... மேலும் பார்க்க

மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும்: நாஞ்சில் சம்பத்

பல்வேறு தடைகள் முரண்பாடுகளை கடந்து நாடு கடந்து மனிதனை ஒன்றிணைப்பது மொழிதான் என்றாா் இலக்கிய பேச்சாளா் நாஞ்சில் சம்பத். மன்னாா்குடி இலக்கிய வட்டம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் சிற... மேலும் பார்க்க

அரசு அலுவலகத்தில் தீ விபத்து

நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்ட பிரிவு பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையறிந்... மேலும் பார்க்க

முன்னாள் ராணுவத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

பஹல்காம் பயங்கரவாத தாகுதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்காரவாத முகாம்களை இந்தியா அழித்தது குறித்து முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ அளித்த பேட்டியில... மேலும் பார்க்க