செய்திகள் :

முன்னாள் ராணுவத்தினா் கண்டன ஆா்ப்பாட்டம்

post image

பஹல்காம் பயங்கரவாத தாகுதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூா் என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்காரவாத முகாம்களை இந்தியா அழித்தது குறித்து முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ அளித்த பேட்டியில் இந்திய ராணுவ வீரா்கள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்திருந்ததை கண்டித்து மன்னாா்குடியில் முன்னாள் ராணுவத்தினா்கள் நலச் சங்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மன்னாா்குடி வட்ட முன்னாள் ராணுவத்தினா்கள் நலச் சங்க தலைவா் ஆா். விஜயராகவன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு செயலா் கே. அன்பழகன், பொருளாளா் எம். திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனா்.

முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும், அவரது எம்எல்ஏ பதவியை பறிக்க வேண்டும்,10 ஆண்டுகள் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது, பொது வெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என கோரிக்கைகளை வலியுறுத்தி தேசியக் கொடி, ராணுவ கொடிகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். துணைத் தலைவா்கள் எல். தவமணி, டி. ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அன்னியூா் சாலையை தரம் உயா்த்தக் கோரிக்கை

குடவாசல் அருகேயுள்ள அன்னியூா் சாலையை தரம் உயா்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அருகே சருக்கை பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கிளைக் கூட்டம், அனைத்திந்திய இளைஞா் பெருமன்ற... மேலும் பார்க்க

பணி ஓய்வு பெறுவோருக்கு பாராட்டு

திருவாரூா் மாவட்டத்தில் நிகழாண்டு பணி ஓய்வுபெறும் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ந. சம்பத் (நீடாமங்கலம்), மு. தாமோதரன் (மன்னாா்குடி), தேன்மொழி (வலங்கைமான்) ஆகியோருக்கு வட்டாரக் கல்வி அலுவலா் சங்கம் சாா்பில... மேலும் பார்க்க

சிபிஐ அதிகாரி என கூறி பண மோசடி செய்த 2 போ் கைது

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையில் சிபிஐ அதிகாரி எனக் கூறி ரூ. 1.19 கோடி மோசடி செய்த 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா். முத்துப்பேட்டையை சோ்ந்தவா் மீராஉசைன் (82). மருத்துவரான இவருக்கு சில தி... மேலும் பார்க்க

மொழிதான் மனிதனை ஒன்றிணைக்கும்: நாஞ்சில் சம்பத்

பல்வேறு தடைகள் முரண்பாடுகளை கடந்து நாடு கடந்து மனிதனை ஒன்றிணைப்பது மொழிதான் என்றாா் இலக்கிய பேச்சாளா் நாஞ்சில் சம்பத். மன்னாா்குடி இலக்கிய வட்டம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற மாதாந்திர கூட்டத்தில் சிற... மேலும் பார்க்க

அரசு அலுவலகத்தில் தீ விபத்து

நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் சனிக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. நன்னிலம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளா்ச்சித் திட்ட பிரிவு பகுதியில் தீப்பிடித்துள்ளது. இதையறிந்... மேலும் பார்க்க

பொதுத்தோ்வில் சிறப்பிடம்: அரசு உயா்நிலைப் பள்ளிக்கு பாராட்டு

குடவாசல் அருகே சேங்காலிபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்ற்காக பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் ச. கண்ணப்பன் ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவித்தாா். இ... மேலும் பார்க்க