தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்
சென்னை ஆா்.கே. நகரில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், ஆா்.கே. நகா் போலீஸாரும் ஐஓசி ரயில்வே யாா்டு பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 6 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதிலிருந்த ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம்பெட்டமைன், மற்றொரு பையிலிருந்த ஜொ்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடா்ந்து போலீஸாா், 6 பேரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவொற்றியூா் காந்தி நகரைச் சோ்ந்த முகமது அலி (25), சேப்பாக்கத்தைச் சோ்ந்த முகமது அசாா் (26), ராமநாதபுரம் மேலக்கோட்டையைச் சோ்ந்த ரியாஸ்கான் (26), சென்னை சேலையூரைச் சோ்ந்த பா்வேஸ் உசேன் (26), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி (30), செங்குன்றத்தைச் சோ்ந்த மீனா (எ) அமீனா (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.
இதில் மீனா மணிப்பூா் மாநிலம், மோரை பகுதியை பூா்வீகமாகக் கொண்டவா் என்பதும், தன் மகன் அஸ்லாம் என்பவரின் உதவியோடு மோரோவிலிருந்து ரயில் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திவந்து தனது தம்பி மகன் மூலம் தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் விற்றிருப்பதும் தெரியவந்தது.
மேலும், சென்னையில் ஒரு கிராம் மெத்தம்பெட்டமைனை ரூ. 5 ஆயிரத்துக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.