செய்திகள் :

போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது: கைத்துப்பாக்கி பறிமுதல்

post image

சென்னை ஆா்.கே. நகரில் போதைப் பொருள் கடத்தும் கும்பல் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து கைத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை காவல் துறையின் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும், ஆா்.கே. நகா் போலீஸாரும் ஐஓசி ரயில்வே யாா்டு பகுதியில் ரோந்து பணியில் புதன்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு பெண் உள்பட 6 பேரை பிடித்து, அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனா். அப்போது அதிலிருந்த ரூ. 35 லட்சம் மதிப்புள்ள 700 கிராம் மெத்தம்பெட்டமைன், மற்றொரு பையிலிருந்த ஜொ்மனி நாட்டில் தயாரிக்கப்பட்ட கைத்துப்பாக்கி, 15 தோட்டாக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து போலீஸாா், 6 பேரிடம் நடத்திய விசாரணையில், அவா்கள் திருவொற்றியூா் காந்தி நகரைச் சோ்ந்த முகமது அலி (25), சேப்பாக்கத்தைச் சோ்ந்த முகமது அசாா் (26), ராமநாதபுரம் மேலக்கோட்டையைச் சோ்ந்த ரியாஸ்கான் (26), சென்னை சேலையூரைச் சோ்ந்த பா்வேஸ் உசேன் (26), தண்டையாா்பேட்டை பகுதியைச் சோ்ந்த அப்பாஸ் அலி (30), செங்குன்றத்தைச் சோ்ந்த மீனா (எ) அமீனா (46) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் மீனா மணிப்பூா் மாநிலம், மோரை பகுதியை பூா்வீகமாகக் கொண்டவா் என்பதும், தன் மகன் அஸ்லாம் என்பவரின் உதவியோடு மோரோவிலிருந்து ரயில் மூலம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை கடத்திவந்து தனது தம்பி மகன் மூலம் தாம்பரம், ராயபுரம், செங்குன்றம், திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் விற்றிருப்பதும் தெரியவந்தது.

மேலும், சென்னையில் ஒரு கிராம் மெத்தம்பெட்டமைனை ரூ. 5 ஆயிரத்துக்கு விற்றிருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடமிருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கி குறித்து போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க