செய்திகள் :

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

post image

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூரில் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரக் கூட்டத்தில் விஜய்யைப் பார்க்க மக்கள் கூடியபோது நேரிட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி 9 அப்பாவி குழந்தைகள் உள்பட 41 பேர் பரிதாபமாக பலியாகினர்.

41 பேர் பலியான இந்தச் சம்பவத்தில் ஆளும் திமுகவினர் மின்சாரத்தைத் துண்டித்து கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதாக தவெகவினர் குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்த நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி இந்த விவகாரம் குறித்து விடியோ ஆதாரங்களுடன் விளக்கம் அளித்தார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “உண்மைக் கண்டறியும் குழு மணிப்பூருக்குச் சென்றிருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்கும். கும்பமேளாவில் நேரிட்ட நெரிசல் பலியை விசாரிக்க சென்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதேபோன்று குஜராத்தில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் உண்மையைக் கண்டறிய சென்றிந்தால் ஏற்புடையதாக இந்திருக்கும்.

எங்கெல்லாம் சென்று உண்மையைக் கண்டறிய செல்லாமல் கரூருக்கு மட்டும் வந்தது ஏன்? உள்ளபடியே விசாரணை ஆணையத்தின் அறிக்கையின்படி செயல்படுவோம்.

அதேபோல, இந்த விவகாரம் குறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், அவர்களை அழைத்து விசாரிக்கவும் உண்மைக் கண்டறியும் குழுவிடம் தெரிவித்துக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Why didn't the fact-finding team go to Manipur? - Senthil Balaji questions BJP!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க