செய்திகள் :

கட்டுக்கடங்காத கூட்டமல்ல; கட்டுப்பாடற்ற கூட்டம்! செந்தில் பாலாஜி

post image

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் அல்ல, கட்டுப்பாடற்ற கூட்டம் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கரூர் விஜய் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியான விவகாரத்தில் அரசுக்கு எதிராகவும், கரூரைச் சேர்ந்த திமுக முன்னாள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராகவும் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டது.

இதுதொடர்பாக கரூரில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி பேசுகையில்,

“கத்தியால் கிழிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் எந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். ஸ்பிரே அடித்ததாக கூறப்படுகிறது, அது ஏன் எந்த செய்திகளின் நேரலையிலும் வரவில்லை?

கரூரில் கூடியது கட்டுக்கடங்காத கூட்டம் கிடையாது, கட்டுப்பாடற்ற கூட்டம். அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்னதாக நடைபெற்ற அதிமுக கூட்டம் அமைதியாகதான் நடந்தது. அதைவிட கூடுதலாக 10,000 பேர்தான் இந்த கூட்டத்தில் இருந்தனர்.

கரூரில் பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு 500 மீட்டர் முன்னதாகவே வாகனத்தில் சென்று விஜய் விளக்கை அணைத்துக் கொண்டார். அனைத்துக் கூட்டமும் பிரசாரப் பகுதிக்கு வரவேண்டும் என அப்படி செய்தாரா? வாகனத்தின் முன்புறமோ, வாகனத்தின் மேல் நின்றோ ரசிகர்களுக்கு கை அசைக்காமல் சென்றது ஏன்?

கரூர் பிரசாரத்தில் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை. நெரிசல் ஏற்பட்ட அடுத்த நாள் 2,000 ஜோடி செருப்புகள் கிடந்தது. ஒரு காலி தண்ணீர் பாட்டிலாவது கிடந்ததா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

Not an unruly crowd; an uncontrolled crowd! Senthil Balaji

இதையும் படிக்க : விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யும்!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகமாக பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:இந்திய வானிலை ஆய்வு துறை வ... மேலும் பார்க்க

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். கரூரில் வேலுச்சாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின்... மேலும் பார்க்க

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் விளக்கம் அளித்துள்ளார்.கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜ... மேலும் பார்க்க

மணிப்பூருக்கு உண்மை கண்டறியும் குழு செல்லாதது ஏன்? - பாஜகவுக்கு செந்தில் பாலாஜி கேள்வி!

கரூருக்கு வந்த உண்மை கண்டறியும் பாஜக குழுவினர், கலவரம் ஏற்பட்ட மணிப்பூருக்குச் செல்லாதது ஏன்? என கரூர் எம்.எல்.ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் வேலுசாமிபுரத்த... மேலும் பார்க்க

இன்றும் நாளையும் பூஜைகளுக்கு உகந்த நேரங்கள்!

2025 ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை செய்ய உகந்த நேரத்தை தினமணியின் ஜோதிடர் கேசிஎஸ் ஐயர் கணித்துள்ளார். நல்ல நேரம்சரஸ்வதி/ஆயுத பூஜை 01-10-2025 (புதன்கிழமை) நேரம்: காலை 9.00 மணிக்கு மேல் 10.00 மணிக்குள் (குரு ... மேலும் பார்க்க

விஜய் உரிய நேரத்தில் வந்திருந்தால் துயரம் நேரிட்டிருக்காது: செந்தில் பாலாஜி!

கரூரில் விஜய் பிரசாரத்தில் நேரிட்ட கூட்ட நெரிசலை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் அமைச்சரும், கரூர் எம்எல்ஏவுமான செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க