செய்திகள் :

தாய் கொலை; 19 வயது வாலிபருடன் கைதான 47 வயது மகள்

post image

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த மகள் உமா ராணி வீட்டின் மாடியில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் ஒன்றாம் தேதி இரவு வழக்கம் போல் உறங்க சென்ற ராஜம்மாள் அதிகாலையில் கழுத்து மற்றும் மார்பில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கொலையாகிக் கிடந்தார்.

தாயை கொலை செய்த மகள் உமா ராணி

இந்தக் கொலை தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவின் படி உதவி கண்காணிப்பாளர் குணால் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளைத் தேடி வந்தனர். அப்போது ராஜம்மாளின் மகள் உமா ராணியின் செயல்பாடுகளையும் போலீஸார் கண்காணித்து வந்தனர். மேலும் அவரது செல் போனை ஆய்வுசெய்த போது அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வர பாண்டியன் (19) என்ற வாலிபருடன் உமா ராணி தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாரின் விசாரணையின் போது, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நீடித்த இந்த விஷயத்தை உமா ராணியின் தாய் ராஜம்மாள் கண்டித்துள்ளார்.

விக்னேஸ்வர பாண்டியன்

இதனால் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்ட உமா ராணியும் விக்னேஸ்வர பாண்டியனும் சேர்ந்து கடந்த செப்டம்பர் ஒன்றாம் தேதி இரவு தூங்கிக் கொண்டிருந்த ராஜம்மாளின் முகத்தினை தலையணையால் அழுத்தினர். இதில் மயக்கம் அடைந்த அவரை அரிவாள் மனையால் குத்திக் கொலைசெய்ததை போலீஸாரிடம் ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வயது மீறிய முறையற்ற உறவுக்காக பெற்ற தாயை மகளே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை: கணவரைக் கொன்று விட்டுப் பொய் சொன்ன மனைவி; இறப்பதற்கு முன் கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு... மேலும் பார்க்க

'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?

பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந... மேலும் பார்க்க

நீலகிரி: வாழிடம் இழந்த யானைகள் தாக்குதல் - ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்த சோகம்

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் தடம் மாறி வருகின்றன. உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்ற... மேலும் பார்க்க

திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா?

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ராணிக்கு வரன் தேடி அவரின் பெற்றோர் திருமண த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: சகோதரி கண்ணெதிரே பெண் பாலியல் வன்கொடுமை; இபிஎஸ் கண்டனம்; 2 போலீஸ்காரர்கள் கைது

திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏந்தல் புறவழிச்சாலை வழியாகச் சென்ற ஆந்திர மாநிலத்... மேலும் பார்க்க