செய்திகள் :

நீலகிரி: வாழிடம் இழந்த யானைகள் தாக்குதல் - ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்த சோகம்

post image

நீலகிரி மலையில் வாழிடங்களையும் வலசைப்பாதைகளையும் இழந்து தவிக்கும் யானைகள் போக்கிடம் தெரியாமல் தடம் மாறி வருகின்றன.

உணவு, தண்ணீர், இனப்பெருக்கம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளுக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர முடியாமல் தவிக்கும் யானைகளை பெருந்தோட்டக் குடியிருப்புகளில் தங்க வைக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களும் அப்பாவிப் பழங்குடிகளும் எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால், கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மனித உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

யானை தாக்கியதில் உயிரிழந்த ராஜேஷ்

இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பொக்காபுரம், தொட்ட லிங்கி பகுதியைச் சேர்ந்த புட்டமாதன் என்பவர் வழக்கமான ஒற்றையடிப் பாதையில் நேற்று காலை நடந்து செல்கையில் திடீரென யானை ஒன்று எதிர்ப்பட்டு தாக்கியிருக்கிறது.

படுகாயமடைந்த அவரை மீட்ட உள்ளூர் மக்கள், மசினகுடியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளிக்கச் செய்துள்ளனர்.

உயர் சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

இது குறித்து காவல்துறை மற்றும் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யானை
யானை

இந்த நிலையில், பந்தலூர் அருகில் உள்ள நெலாக்கோட்டை பஜாரில் இருந்து குடும்பத்துடன் ராக்வுட் எஸ்டேட்டிற்கு நேற்றிரவு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்த தொழிலாளி ராஜேஷ் என்பவரை யானை விரட்டி தாக்கியதில் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

நீலகிரி மாவட்டத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு யானை - மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்களைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வரும் நிலையில், யானைத் தாக்குதல் சம்பவங்களில் ஒரே நாளில் இரண்டு நபர்கள் உயிரிழந்திருப்பது நிலைமையை மேலும் சிக்கலாக்கியிருக்கிறது.

தாய் கொலை; 19 வயது வாலிபருடன் கைதான 47 வயது மகள்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காயாம்பு கோயில் தெருவைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (77). தேவகோட்டை மருத்துவமனையில் மகப்பேறு உதவியாளராக பணியாற்றி வந்த இவர், பணி ஓய்வுக்குப் பின் சாயல்குடியில் வசிக்கும் மூத்த... மேலும் பார்க்க

சென்னை: கணவரைக் கொன்று விட்டுப் பொய் சொன்ன மனைவி; இறப்பதற்கு முன் கணவன் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகலாத் சர்தார். இவர் தன்னுடைய முதல் மனைவியைப் பிரிந்து, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த, கணவரைப் பிரிந்து வாழும் பிங்கி என்பவருடன் குடும்பம் நடத்தி வருகிறார். பின்னர் பிழைப்பு... மேலும் பார்க்க

'போலி விளம்பரம், பகுதிநேர வேலை, கை நிறைய காசு, லட்சங்கள் அபேஸ்' - சைபர் கொள்ளையர் சிக்கியது எப்படி?

பகுதிநேர வேலை, அதிக வருமானம் என, சமூக ஊடகங்களில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்கள், வாட்ஸ் அப்பில் வரும் குறுஞ்செய்திகள், ஆன்லைன் தங்க வர்த்தகம், பங்குச்சந்தை முதலீடு, டிஜிட்டல் மார்க்கெட்டிங் எனப் பல்... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: கர்ப்பத்தைக் கலைக்க சொன்ன காதலன்; கழுத்தை அறுத்துக் கொன்ற காதலி; விசாரணையில் பகீர் தகவல்

சத்தீஷ்கர் மாநிலம் பிலாஸ்பூர் அருகில் உள்ள கோனி என்ற கிராமத்தில் வசிக்கும் மைனர் பெண் ராய்ப்பூரில் வசிக்கும் மொகமத் சதாம் என்ற வாலிபரைக் காதலித்து வந்தார்.இதில் மைனர் பெண் கர்ப்பமானார். பீகாரைச் சேர்ந... மேலும் பார்க்க

திருமணத்துக்கு முன் தனிமை; பணத்தைச் சுருட்டியதும் எஸ்கேப் - யார் இந்த மன்மதன் சூர்யா?

சென்னை, சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர் தனியார் மருத்துவமனையில் நர்ஸாக வேலை செய்து வருகிறார். கடந்த 2024-ம் ஆண்டு ராணிக்கு வரன் தேடி அவரின் பெற்றோர் திருமண த... மேலும் பார்க்க

திருவண்ணாமலை: சகோதரி கண்ணெதிரே பெண் பாலியல் வன்கொடுமை; இபிஎஸ் கண்டனம்; 2 போலீஸ்காரர்கள் கைது

திருவண்ணாமலை கிழக்குக் காவல் நிலையத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகியோர் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏந்தல் புறவழிச்சாலை வழியாகச் சென்ற ஆந்திர மாநிலத்... மேலும் பார்க்க