செய்திகள் :

H1-B விசா கட்டுப்பாடுகள்: "அமெரிக்க நிறுவனங்கள் தங்களது பணிகளை இந்தியாவுக்கு மாற்றலாம்" - நிபுணர்கள்

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் H1-B விசாவுக்கான கட்டணத்தை உயர்த்தியிருப்பதனால் பன்னாட்டு நிறுவனங்கள் அவர்களின் நிதி மேலாண்மை முதல் ஆராய்ச்சி மேம்பாடு வரை கையாளும் உலகளாவிய திறன் மையங்களை (GCCs) இந்தியாவிலேயே அமைக்கலாம் எனப் பொருளாதார வல்லுநர்களும் தொழில்துறையினரும் கணிக்கின்றனர்.

இந்தியாவில் இதுபோன்ற 1,700 உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன. உலகில் உள்ள 3,200 GCC-க்களில் இது பாதிக்கும் மேல் என்பது குறிப்பிடத்தக்கது.

H-1B விசா - ட்ரம்ப் | இந்தியா, சீனா
H-1B விசா - ட்ரம்ப்

வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு சார்பு மற்றும் விசா கெடுபிடிகள் நிறுவனங்களைத் தங்களது பணியாளர்களை பணிக்குச் சேர்க்கும் யுத்திகளை மாற்றியமைக்கத் தூண்டியிருக்கிறது.

டெலாய்ட் இந்தியாவின் பார்ட்னரும் GCC தொழில்துறைத் தலைவருமான ரோஹன் லோபோ, பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறு மதிப்பீடு செய்வதாகக் கூறியிருக்கிறார்.

2000 முதல் 5000 டாலராக இருந்த H1-B விசா கட்டணத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 1 லட்சம் டாலராக மாற்றினார். இந்திய மதிப்பில் சுமார் 88 லட்சம் ரூபாய்.

கூகுள்
கூகுள்

அத்துடன் அமெரிக்க செனட்டர்கள் H-1B மற்றும் L-1 தொழிலாளர் விசா திட்டங்களில் விதிகளைக் கடுமையாக்கும் மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்தினர். இந்த மசோதா முதலாளிகள் வெளிநாட்டினரை அழைப்பதற்குப் பயன்படுத்தும் ஓட்டைகளை அடைப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ட்ரம்பின் விசா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்தால், செயற்கை நுண்ணறிவு (AI), தயாரிப்பு மேம்பாடு, சைபர் பாதுகாப்பு, அனலிடிக்ஸ் போன்ற துறைகளுடன் தொடர்புடைய உயர் நிலைப் பணிகளை அமெரிக்க நிறுவனங்கள் இந்திய GCC-களுக்கு மாற்றக்கூடும் எனத் தொழில்துறை நிபுணர்கள் கணிக்கின்றனர்.

ஹெச்1-பி விசா ஸ்பான்சர்களில் அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் கூகிள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் உள்ளிட்ட பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும், வால் ஸ்ட்ரீட் வங்கியான ஜேபி மோர்கன் சேஸ் மற்றும் சில்லறை விற்பனையாளர் வால்மார்ட் ஆகிய நிறுவனங்களும் பிரதானமாக உள்ளதாக அமெரிக்க அரசின் தரவு காட்டுகிறது.

இந்த நிறுவனங்கள் முக்கிய பணிகளை இந்தியாவில் மேற்கொள்ளலாம் அல்லது கொலம்பியா, மெக்சிகோ, கனடா உள்ளிட்ட அண்டை நாடுகளையும் நாடலாம் எனத் தெரிவிக்கின்றன.

டிகிரி படித்த இளைஞரா நீங்கள்? கனரா வங்கியில் பயிற்சி வேலை! - எப்படி விண்ணப்பிக்கலாம்?

கனரா வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?அப்ரண்டீஸ் பயிற்சி பணி. இது 12 மாதங்களுக்கான பயிற்சிப் பணி ஆகும். மொத்த காலிப்பணியிடங்கள்: 3,500; தமிழ்நாட்டில் 394, புதுச்சேரிய... மேலும் பார்க்க

Career: மத்திய அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பணி; யார், எப்படி விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்

ஏகலைவ்யா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் (EMRS) வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.என்ன பணிகள்?கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத பணிகள்.மொத்த காலிப்பணியிடங்கள்: 7,267.என்னென்ன பணிகள் மற்றும் அ... மேலும் பார்க்க

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் மேனேஜர் பணி! ரூ.1 லட்சம் வரை சம்பளம் - யார், எப்படி விண்ணப்பிக்கலாம்?

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? மேனேஜர் (கிரெடிட் அனலிஸ்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 63வயது வரம்பு: 25 - 35 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)சம்பளம்: ரூ... மேலும் பார்க்க

Careers: இன்ஜினீயரிங் படித்திருக்கிறீர்களா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காத்திருக்கிறது வேலை

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. என்ன பணி?ஸ்பெஷலிஸ்ட் அதிகாரி. மொத்த காலிப்பணியிடங்கள்: 127வயது வரம்பு: குறைந்தபட்சம் 25, அதிகபட்சம் 40 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க

டிகிரி படித்திருக்கிறீர்களா? இந்திய ரிசர்வ் வங்கியில் வேலை - ரூ.1.50 லட்சம் வரை சம்பளம்!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி?கிரேட் 'பி' பிரிவில் DR, DEPR, DSIM துறைகளில் அதிகாரி. மொத்த காலிபணியிடங்கள்: 120வயது வரம்பு: 21 - 30 (சில பிரிவினருக்கு தளர்வ... மேலும் பார்க்க

10ஆம் வகுப்பு தேர்ச்சி, டிரைவிங் லைசென்ஸ் இருக்கிறதா? மத்திய அரசுப் பணி - முழு விவரங்கள்

உளவுத்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? பாதுகாப்பு உதவியாளர் (மோட்டர் டிரான்ஸ்போர்ட்)மொத்த காலிபணியிடங்கள்: 455 (சென்னை - 11)வயது வரம்பு: 18 - 27 (சில பிரிவினருக்கு தளர்வுகள் ... மேலும் பார்க்க