செய்திகள் :

மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா? தமிழக எம்பி கேள்வி

post image

தமிழக எம்பிக்களை அநாகரீகமானவர்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், மணிப்பூர் பெண்களை நிர்வாணமாக்கியதுதான் உங்கள் நாகரீகமா என்று தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தொடங்கியுள்ள நிலையில், மணிப்பூர் கலவரம் குறித்து மக்களவையில் எம்பிக்கள் இன்று விவாதித்தனர்.

இதையும் படிக்க : நாட்டில் 8 மணிநேரத்துக்கு மேல் தூங்குவது 2% பேர் மட்டுமே!

இந்த விவாதத்தில் திமுக சார்பில் தென்காசி எம்பி ராணி ஸ்ரீகுமார் பேசியதாவது:

”வடகிழக்கில் உள்ள 7 சகோதரிகளில் ஒரு சகோதரி ஒன்றை ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கிறார்கள். இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறி 250க்கும் மேற்பட்டோர் எரித்து கொல்லப்பட்டுள்ளனர்.

சுமார் 60,000 பேர் சொந்த மாநிலங்களிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் சேதப்படுத்தப்பட்டு, தேவாலயங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. 15,000 மாணவர்களின் கல்வி பறிபோகியுள்ளது.

இத்தகைய விவாதத்தின்போது, பிரதமர் அவைக்கு வரவேண்டியது அவசியம் இல்லையா? மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஆயுதக் கிடங்குகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் வேடிக்கை பார்க்கும் பிரதமர், தன்னை செளகிதார்(பாதுகாவலர்) என்கிறார்.

உக்ரைன் பிரச்னையை தீர்த்துவைக்க முனைப்பு காட்டும் பிரதமர், சொந்த நாட்டில் உள்ள சிறிய மாநிலத்தின் பிரச்னையை தீர்க்க வலுவில்லையா? என்பதை மத்திய அரசு விளக்க வேண்டும்.

கார்ப்ரேட் முதலாளிகளின் இல்ல நிகழ்வுக்கு விரைந்து செல்லும் பிரதமருக்கு மணிப்பூர் செல்ல மனமில்லையா? ஏன் செல்ல மறுக்கிறார்? மக்களுக்கு நம்பிக்கை ஊட்ட மறுக்கிறார் என்பதை விளக்க வேண்டும்.

பாஜக அரசின் அரசியல் ஆதாயத்துக்காக குக்கி சமூக மக்களின் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளது. அதனால்தான் வன்முறையை மத்திய அரசு தீர்த்து வைக்காமல் இருக்கிறது.

குக்கி இன பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற காணொலியை உலகமே பார்த்ததே, இது எந்த மாதிரியான நாகரீகம்? இதுதான் இரட்டை என்ஜின் அரசின் செயல் திறனா?

தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர் என்று மத்திய அமைச்சர் கூறிகிறார். இதுதான் உங்கள் நாகரீகமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தங்கம் விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(மார்ச் 12) சவரனுக்கு ரூ.360 அதிகரித்துள்ளது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வந்த நிலையில் சனிக்கிழமை சவரன் ரூ.64,320-க்கும், திங்கள்கிழ... மேலும் பார்க்க

திமுக கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசன் நியமனம்!

திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளராக எழிலரசனை நியமித்து கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.திமுக சட்டப்பேரவை உறுப்பினரான எழிலரசன், மாணவர் அணிச் செயலாளராக பதவி வ... மேலும் பார்க்க

தமிழா்கள் மீது பாஜகவுக்கு வன்மம்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழா்கள் மீது பாஜகவுக்கு இருக்கும் வன்மம் வெளிப்பட்டுவிட்டதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.இது தொடா்பாக அவா் எக்ஸ் தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:பாஜகவைச் ச... மேலும் பார்க்க

பிளஸ் 2 கணிதம், வணிகவியல் தோ்வுகள் எளிது: ‘சென்டம்’ அதிகரிக்கும்

சென்னை: பிளஸ் 2 கணிதம், வணிகவியல் பாடங்களுக்கான தோ்வுகள் எளிதாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்த நிலையில், இரு பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என ஆசிரியா்கள... மேலும் பார்க்க

திருச்சி - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்: இன்று ம

சென்னை: கோடைக்கால விடுமுறையை முன்னிட்டு திருச்சி - தாம்பரம் இடையே ஏப். 4-ஆம் தேதி முதல் சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது. இதற்கான முன்பதிவு புதன்கிழமை (மாா்ச் 12) காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.இது குறித்... மேலும் பார்க்க

கூட்டு நடவடிக்கைக் குழு: இன்று கா்நாடகம், தெலங்கானாவுக்கு செல்லும் திமுக குழு

சென்னை: தொகுதி மறுசீரமைப்பு தொடா்பாக கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்கும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க திமுக குழு புதன்கிழமை (மாா்ச் 12) கா்நாடகம், தெலங்கானாவுக்குச் செல்கிறது.முன்னதாக, ஒடிஸா மாநிலத்துக... மேலும் பார்க்க