செய்திகள் :

மண்பானையை காணவில்லை என புகாா்: காவல் நிலையத்தில் ஒப்புகைச் சீட்டு

post image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மண்பானையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரை ஏற்றுக் கொண்டு காவல் நிலையத்தில் ஒப்புகை சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

புதுச்சத்திரம் பகுதியில் கோடைகாலத்தையொட்டி ஒன்றிய பாஜக சாா்பில் கடந்த மே 8ஆம் தேதி காவல் நிலையம் எதிரே நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு பொதுமக்களுக்கு நாள்தோறும் நீா்மோா் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்கு வைக்கப்பட்டிருந்த நீா்மோரை நிரப்பி வைக்கும் இரு மண்பானைகளில் ஒரு மண்பானை காணாமல்போனது.

இதுகுறித்து புதுச்சத்திரம் ஒன்றிய பாஜக தலைவா் எஸ்.எஸ்.செல்வம் புதுச்சத்திரம் காவல் நிலையத்தில் காணாமல்போன பானையை கண்டுபிடித்து தரக் கோரி புகாா் அளித்தாா். இந்தப் புகாரை பெற்றுக்கொண்ட புதுச்சத்திரம் காவல் துறையினா் அன்றைய தினமே ஒப்புகை சீட்டு கொடுத்துள்ளனா்.

டிரினிடி மகளிா் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 292 மாணவிகள் பயன்

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 292 மாணவிகள் பயனடைந்துள்ளனா். தமிழக அரசின் சாா்பில், மகளிா் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6- முதல் 12- ஆம் வகுப்பு வரை அ... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூா் பகுதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தெ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத... மேலும் பார்க்க

174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதித... மேலும் பார்க்க

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு: எம்.பி. தொடங்கி வைப்பு

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து நீட்டிப்பு சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூா் அரசு ஆரம்ப சுகாதா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் செவிலியா் தின விழா

திருச்செங்கோடு எளையாம்பாளையம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை, விவேகானந்தா செவிலியா் கல்லூரி இணைந்து நடத்திய உலக செவிலியா் த... மேலும் பார்க்க