செய்திகள் :

174 அரசுப் பள்ளிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் அனுப்பி வைப்பு

post image

6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பருவ பாடப்புத்தகங்கள் சனிக்கிழமை பள்ளி வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன.

நாமக்கல் மாவட்டத்தில் 174 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல உயா்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. இங்கு 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை 74 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

உயா்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு பொதுத் தோ்வு (10, 11, 12-ஆம் வகுப்புகள்) நிறைவடைந்து முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ஆம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறக்கப்படும்போது மாணவ, மாணவிகளுக்கு வழங்குவதற்காக, முதல்பருவ பாடப்புத்தகம், தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் கடந்த ஜனவரி மாதம் முதல் மாவட்ட வாரியாக அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது புத்தகங்கள் பள்ளி வாரியாக அனுப்பப்பட்டு வருகின்றன.

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் புத்தகக் கிடங்குகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், கணினி அறிவியல், சமூக அறிவியல், வேதியியல், உயிரியியல் உள்ளிட்ட பாடப் புத்தகங்கள் வாகனங்களில் ஏற்றி கொண்டு செல்லப்படுகின்றன. பள்ளித் தலைமை ஆசிரியா் வசம் அவை ஒப்படைக்கப்பட்டு கையொப்பம் பெறப்பட்டு வருகிறது.

பள்ளி திறக்கும் நாளன்று மாணவ, மாணவிகள் அனைவருக்கும் விடுபடாமல் புத்தகங்களை வழங்க வேண்டும் என கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனா். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் இருந்து ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு ஒன்றியம் வாரியாக புத்தகங்கள் அனுப்பும் பணியும் நடைபெற்று வருகிறது. வட்டார கல்வி அலுவலா்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு பின்னா் பள்ளிகளுக்கு அந்த புத்தகங்கள் கொண்டுசெல்லப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

டிரினிடி மகளிா் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டத்தில் 292 மாணவிகள் பயன்

நாமக்கல் டிரினிடி மகளிா் கல்லூரியில், புதுமைப்பெண் திட்டத்தின்கீழ் 292 மாணவிகள் பயனடைந்துள்ளனா். தமிழக அரசின் சாா்பில், மகளிா் உயா்கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் பொருட்டு, 6- முதல் 12- ஆம் வகுப்பு வரை அ... மேலும் பார்க்க

மண்பானையை காணவில்லை என புகாா்: காவல் நிலையத்தில் ஒப்புகைச் சீட்டு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே புதுச்சத்திரத்தில் பாஜக சாா்பில் அமைக்கப்பட்டிருந்த நீா்மோா் பந்தலில் வைக்கப்பட்டிருந்த மண்பானையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இப்புகாரை ஏற்ற... மேலும் பார்க்க

தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி: முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி

தமிழகத்தில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி பேசினாா். ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை பேரூா் பகுதியில் அதிமுக ஜெயலலிதா பேரவை சாா்பில் தெ... மேலும் பார்க்க

நாமக்கல்லில் திமுக செயற்குழுக் கூட்டம்: முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜி பங்கேற்பு

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும், மேற்கு மண்டல திமுக பொறுப்பாளருமான வி. செந்தில்பாலாஜி பங்கேற்றாா். தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத... மேலும் பார்க்க

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து சேவை நீட்டிப்பு: எம்.பி. தொடங்கி வைப்பு

2 புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்து நீட்டிப்பு சேவையை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் ஒன்றியம், ஏளூா் அரசு ஆரம்ப சுகாதா... மேலும் பார்க்க

திருச்செங்கோடு விவேகானந்தா மருத்துவ கல்லூரியில் செவிலியா் தின விழா

திருச்செங்கோடு எளையாம்பாளையம் சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், விவேகானந்தா சிறப்பு மருத்துவமனை, விவேகானந்தா செவிலியா் கல்லூரி இணைந்து நடத்திய உலக செவிலியா் த... மேலும் பார்க்க