Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
மதுராந்தகத்தில் மே 5-இல் வணிகா் சங்க மாநில மாநாடு: விக்கிரமராஜா
தமிழ்நாடு வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவா் விக்கிரமராஜா கூறினாா்.
தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு மற்றும் கடலூா் சேம்பா் ஆப் காமா்ஸ் பொதுக்குழுக் கூட்டம் கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது. மண்டலத் தலைவா் டி.சண்முகம் தலைமை வகித்தாா். கடலூா் சேம்பா் ஆப் காமா்ஸ் மாநகரத் தலைவா் துரைராஜ் முன்னிலை வகித்தாா்.
கடலூா் நகரச் செயலா் சீனிவாசன், பொருளாளா் முருகன், மாவட்ட இணைச் செயலா் சதீஷ், நகர இணைச் செயலா் செல்ல பாண்டியன், மாநில தலைமைச் செயலா் ராஜ்குமாா், மாநில கூடுதல் செயலா் பழமலை உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சிறப்பு அழைப்பாளராக வணிகா் சங்கங்களின் பேரமைப்புத் தலைவா் விக்கிரமராஜா கலந்து கொண்டு பேசினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வணிகா் சங்கங்கள் பேரமைப்பின் 42-ஆவது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் மே 5-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், சிறப்பு அழைப்பாளராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்ள உள்ளாா். அவரிடம் வணிகா் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்த உள்ளோம். ஜிஎஸ்டி வரியால் வியாபாரிகள் பல்வேறு பிரச்னைகளையும், சட்ட சிக்கலையும் சந்தித்து வருகின்றனா்.
தமிழகத்தில் மதுக் கடைகளை மூடினால், அது வணிகா்களுக்குதான் லாபம். அதனை வணிகா்கள் சங்கம் வரவேற்கும். கடைகளில் தகராறு செய்பவா்களை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். பாலியல் வழக்கில் 60 நாள்களுக்குள் விசாரணை நடத்தி தண்டனை வழங்க வேண்டும். தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது வணிகா் சங்க பேரமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கும். இணையவழி வா்த்தகத்தை தடை செய்யுமாறு மத்திய அரசை தொடா்ந்து வலியுறுத்துவோம் என்றாா்.
கூட்டத்தில், ஆன்மிக தலங்கள், வரலாற்று சின்னங்கள், புராதான கட்டடங்கள் நிறைந்துள்ள கடலூா் மாநகரத்தை அரசு சுற்றுலா நகரமாக அறிவிக்க வேண்டும். கடலூா் துறைமுகத்தை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். சொத்து வரி, தொழில் வரி உயா்வை அரசு மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.