செய்திகள் :

மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

post image

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகளையும், விழாக்களையும் பொதுக்கூட்டங்களையும் நடத்தி வருகிறது.

கலந்துகொண்ட திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகால்

அந்த வகையில் சௌராஷ்டிரா சமூக அமைப்பினர் மதுரையில் பல்வேறு நிகழ்வுகளை நடத்தி வரும் நிலையில் அடுத்ததாக `அரசியல் எழுச்சி மாநாடு’ நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த மாநாட்டை 'சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கை குழு' என்ற அமைப்பு ஒருங்கிணைக்க உள்ள நிலையில், இதன் நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் ஆலோசனைக்கூட்டம் சமீபத்தில் மதுரையில் நடந்தது. இதில் சௌராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்த திமுக, அதிமுக, பாஜக நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்தின்போது பிரதமருடன்

இந்த கூட்டத்தில் 'சௌராஷ்ட்ர மக்களின் கோரிக்கைகளை அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிப்பதற்காக டிசம்பர் 28 அன்று 'சௌராஷ்டிரா அரசியல் எழுச்சி மாநாடு' நடத்த உள்ளதாக' தீர்மானம் செய்யபட்டது.

மாநாட்டு ஏற்பாட்டுக்குழுத் தலைவராக தொழிலதிபர் கே.கே தினேஷ் தேர்வு செய்யபட்டார். மாநாடு நடைபெற வேண்டிய இடம், பங்குபெற வேண்டிய நிகழ்ச்சிகள், அழைக்கப்பட வேண்டிய அரசியல் தலைவர்கள் குறித்தும் விவாதிக்கபட்டது. இதில் பேசிய சௌராஷ்டிரா அரசியல் நடவடிக்கைக் குழுத் தலைவரான ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி கிஷோர்குமார் "இந்த மாநாடு, சௌராஷ்டிர அரசியல் வரலாற்றில் முக்கியமானதாக இருக்கும், திருப்புமுனையை ஏற்படுத்த அனைவரும் உழைக்க வேண்டும்" என்றார்.

அமைக்கப்படவுள்ள கமிட்டிகள் குறித்து பேசியவர்கள் "மாநாட்டிற்காக வரவுள்ள 90 நாட்களும், அதைத் தொடர்ந்து தேர்தலுக்காக 180 நாட்களும் அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்றினால் சௌராஷ்டிர சமூகம் முழுமையாக வெற்றி பெறும்" என்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ எஸ்.எஸ்.சரவணன், பாஜக மாநில நிர்வாகி மகாலட்சுமி, திமுக நிர்வாகி திலீபன் சக்கரவர்த்தி, தவெக நிர்வாகி கோபிசன் ஆகியோரும் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை தெரிவித்தனர்.

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கட்டையைப் போடும் மாவட்ட நிர்வாகி...சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடிய... மேலும் பார்க்க

``மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' -நடிகர் சத்யராஜ்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் 'மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்ப... மேலும் பார்க்க

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட ம... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ``இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்... மேலும் பார்க்க

An open letter to CM MK Stalin | TVK Vijay Karur Stampede | Vikatan | DMK

Tvk karur கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு தவறுகள் உள்ளன. அதையெல்லாம் நாம் விரிவாகப் பேசியிருக்கிறோம். ஆனால், விஜய்யைக் காரணம் காட்டி, முதல்வர் ஸ்டாலின் கரூர் ... மேலும் பார்க்க