செய்திகள் :

"தெருப்பெயர்களில் சாதியை நீக்க அரசாணை; மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு என்ற சாதிப்பெயரா?" - சீமான்

post image

கோவையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை 10.10 கிலோ மீட்டர் தூரத்துக்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்க 2020-ல் அடிக்கல் நாட்டப்பட்ட பணிகள் தற்போது முழுமையாக முடிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே மிக நீண்ட மேம்பாலமாக பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

ரூ.1,791.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்துக்கு `ஜி.டி.நாயுடு' பெயரை சூட்டி முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைத்திருக்கிறார்.

கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலம்
கோவை - அவிநாசி உயர்மட்ட மேம்பாலம்

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், கிராமங்கள், சாலைகள், தெருக்களில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க அரசாணை வெளியிட்டுவிட்டு, மேம்பாலத்துக்கு ஜி.டி.நாயுடு என்று சாதிப்பெயரை வைப்பதுதான் திராவிட மாடலா? என்று கேள்வியை முன்வைத்திருக்கிறார்.

இது குறித்து சீமான், "கோவையில் புதிதாக 1,791 கோடி ரூபாயில் 10 கி.மீ தூரத்திற்குக் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீண்ட கோவை - அவிநாசி சாலை உயர்மட்ட மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயரை வைக்க தமிழ்நாடு அரசு முடிவெடுத்திருப்பதாக நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தீரன் சின்னமலை பெயரை வைத்திருக்கலாமே?

இந்தியாவில் மேம்பாலம் கட்ட சராசரியாக 1 கி.மீ.க்கு 18 கோடி ரூபாய் செலவிட்டுக்கொண்டிருக்கும்பொழுது அதே 1 கி.மீ.க்கு 170 கோடி ரூபாய் மக்கள் பணத்தில் செலவழித்து கட்டப்பட்டிருக்கும் இப்பாலத்திற்கு இந்த நாட்டின் விடுதலைக்காக வீரத்துடன் போர் புரிந்து இன்னுயிர் ஈந்த தீரன் சின்னமலை அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

இந்தி திணிப்பை எதிர்த்து 1938-ல் தொடங்கிய முதலாவது மொழிப் போரில் 03.06.1938-ம் நாள் கைது செய்யப்பட்டு முதலாவது வீரராக சிறைக்களம் புகுந்த பல்லடம் பொன்னுசாமி அவர்களின் பெயரை வைத்திருக்கலாமே?

இவர்களின் பெயரையெல்லாம் விடுத்து ஜி.டி. நாயுடு பெயரை வைத்ததன் காரணமென்ன? எதற்காக அவர் பெயரை வைத்துள்ளீர்கள்?

எதிலும் சாதிப்பெயர்கள் இருக்கக்கூடாது; எல்லாவற்றிலும் சாதியை ஒழித்துவிட்டோம் என்று பேசிய திராவிடத் திருவாளர்கள், பெயரின் பின்னால் சாதிப்பெயரை நீக்கிய திராவிட இயக்கம் என்று நூற்றாண்டு விழா கொண்டாடியவர்கள் ஜி.டி. நாயுடு என்ற சாதிப்பெயரைச் சூட்டுவது ஏன்?

திராவிட இயக்கத்தின் பிதாமகர் பெரியாரின் உடனிருந்த உற்ற தோழரின் பெயரிலிருக்கும் சாதியையே ஒழிக்க முடியாதவர்கள் ஊரில் உள்ள சாதியை எப்படி ஒழிப்பீர்கள்? இதுதான் திராவிட இயக்கம் சாதியை ஒழித்த முறையா?

சென்னையில் நந்தனம் சாலைக்கு முதலில் முத்துராமலிங்கத் தேவர் சாலை எனப் பெயர் வைத்துவிட்டு பிறகு அதை முத்துராமலிங்கனார் சாலை என்று மாற்றிய இந்த அரசு, பாலத்திற்கு சாதியோடு பெயரை சூட்டுவது ஏன்?

பொது இடங்களுக்கு தேவர், தேவேந்திரர் பெயர்களை வைத்தால் சாதி கலவரம் வரும்? வன்னியர், பறையர் பெயரை வைத்தால் சாதி கலவரம் வரும் என்று தவிர்க்கும் தமிழ்நாடு அரசு, நாயுடு என்ற சாதிப்பெயரை வைப்பது எப்படி?

நாங்கள் வாண்டையார் என்றால் வரும் சாதி, நாங்கள் படையாட்சி என்றால் சாதி, நீங்கள் நாயுடு என்றால் மட்டும் வராதா? நாயுடு என்பது சாதிப்பெயர் அல்லாமல் பொதுப்பெயரா?

சீமான்
சீமான்

இன்று ஒரு பக்கம் சாதிப் பெயர்களை நீக்குதல் / மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ஆணையாக வெளியிட்டுவிட்டு இன்னொரு பக்கம் சாதியோடு பாலத்திற்குப் பெயரிடும் இரட்டை நிலைப்பாட்டுக்கு பெயர் தான் திராவிட மாடலா?

கடந்த ஜூன் மாதம் தெருக்களுக்கு சாதிப்பெயரை நீக்க அரசாணை வெளியிட்டது தி.மு.க அரசு.

ஆதிதிராவிட நல விடுதி என்பதை சமூகநல விடுதி என்று வெறும் கட்டடத்திற்குப் பெயர் மாற்றியதையே, சமூகநீதி சாதனைபோல் பேசிய தி.மு.க அரசு, ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்று சாதிப்பெயரைச் சூட்டுவது அயோக்கியத்தனமல்லவா?

தமிழர் மண்ணில் தமிழர்க்கென்று எந்த தனித்த அடையாளமும் இருக்கக்கூடாது என்ற தீய எண்ணத்தைத் தவிர வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?

ஸ்டாலின்
ஸ்டாலின்

ஆகவே, கோவை - அவினாசி சாலை மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயரை வைக்கும் முடிவை கைவிட்டு, தமிழர்களின் தனிப்பெரும் அடையாளங்களாக, கொங்கு மக்களின் பண்பாட்டுப் பெருமைகளாகத் திகழும் தீரன் சின்னமலை, கொடி காத்த குமரன், செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார், முதல் மொழிப்போர் வீரர் பல்லடம் பொன்னுசாமி, மாமன்னர் காலிங்கராயன், பொன்னர் - சங்கர் ஆகியோரின் பெயர்களில் ஒன்றைச் சூட்ட வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.

கழுகார்: வெளிவந்த ஸ்வீட் பாக்ஸ் விவகாரம்; கலக்கத்தில் தந்தை - மகன் டு கொதிக்கும் உடன்பிறப்புகள்!

கொதிக்கும் உடன்பிறப்புகள்!கட்டையைப் போடும் மாவட்ட நிர்வாகி...சமீபத்தில், அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கடலோர மாவட்டம் ஒன்றுக்கு முதன்மையானவர் சென்றிருந்தபோது, அவரைச் சந்திக்க கட்சி நிர்வாகிகள் கூடிய... மேலும் பார்க்க

``மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' -நடிகர் சத்யராஜ்

கோவை அவிநாசி சாலையில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டிலேயே நீளமான உயர் மட்ட பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.9) திறந்து வைத்திருக்கிறார். இந்நிலையில் 'மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்ப... மேலும் பார்க்க

சாதிப் பெயர்களை நீக்கும் அரசாணை: விடுபட்ட அம்பேத்கர், எம்.சி.ராஜா பெயர்கள்; அண்ணாமலை கேள்வி

தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தில், ``இந்த மண்ணின் ஆதிக் குடிகளை இழிவுபடுத்தும் அடையாளமாக காலனி என்ற சொல் பதிவாகியிருக்கிறது.ஆதிக்கத்தின் அடையாளமாகவும், தீண்... மேலும் பார்க்க

மதுரை: நெருங்கும் தேர்தல் - சௌராஷ்ட்ர சமூகத்தினர் நடத்தவிருக்கும் அரசியல் எழுச்சி மாநாடு

தமிழகத்தில் தேர்தல் காலம் நெருங்கி வருகிறது. வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று முடிவெடுக்கவும், தங்கள் சமூகத்தின் பலத்தை காட்டவும் சமீபகாலமாக பல்வேறு சமூக அமைப்புகள் ஆலோசனைக் கூட்டஙகள... மேலும் பார்க்க

An open letter to CM MK Stalin | TVK Vijay Karur Stampede | Vikatan | DMK

Tvk karur கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், தவெக தலைவர் விஜய் மீது பல்வேறு தவறுகள் உள்ளன. அதையெல்லாம் நாம் விரிவாகப் பேசியிருக்கிறோம். ஆனால், விஜய்யைக் காரணம் காட்டி, முதல்வர் ஸ்டாலின் கரூர் ... மேலும் பார்க்க