Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
மன்னாா்குடி தரணி பள்ளி பிளஸ் 2 சிபிஎஸ்இ தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்
மன்னாா்குடி தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 சிபிஎஸ்இ தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.
இப்பள்ளி மாணவா் ஜெ. அரங்க சாய் கிருஷ்ணா 462 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவா் ஆா். அன்புசெல்வன் 449, மாணவி டி.ஆா். ஆராதனா 436 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சிப் பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. ஆங்கிலப் பாடத்தில் ஒரு மாணவி 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை, பள்ளி நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ், தாளாளா் கா. விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் தீ. சாந்தசெல்வி ஆகியோா் பாராட்டினா்.

