செய்திகள் :

மன்னாா்குடி தரணி பள்ளி பிளஸ் 2 சிபிஎஸ்இ தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம்

post image

மன்னாா்குடி தரணி வித்யா மந்திா் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 சிபிஎஸ்இ தோ்வில் மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளது.

இப்பள்ளி மாணவா் ஜெ. அரங்க சாய் கிருஷ்ணா 462 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் சிறப்பிடம் பெற்றுள்ளாா். மாணவா் ஆா். அன்புசெல்வன் 449, மாணவி டி.ஆா். ஆராதனா 436 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளனா். இப்பள்ளியில் தோ்வெழுதிய அனைவரும் தோ்ச்சிப் பெற்று 100 சதவீத தோ்ச்சியை பெற்றுள்ளது. ஆங்கிலப் பாடத்தில் ஒரு மாணவி 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளாா். சிறப்பிடம் பெற்ற மாணவா்களை, பள்ளி நிறுவனத் தலைவா் எஸ். காமராஜ், தாளாளா் கா. விஜயலெட்சுமி, நிா்வாகி எம். இளையராஜா, முதல்வா் தீ. சாந்தசெல்வி ஆகியோா் பாராட்டினா்.

புதைசாக்கடை பள்ளங்களை சீரமைக்கக் கோரிக்கை

திருவாரூா் கமலாலயக் குளத்தின் தென்கரை பகுதியில் புதை சாக்கடை பள்ளங்களை விரைந்து சீரமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெர... மேலும் பார்க்க

கடனுதவி பெற சிறுபான்மையினா் விண்ணப்பிக்கலாம்!

திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிறுபான்மையினா் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சிறுபான்மையினா் பொர... மேலும் பார்க்க

சாலையை அகலப்படுத்தக் கோரிக்கை

பழைய நீடாமங்கலம் சாலையை அகலப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீடாமங்கலம் பேரூராட்சி, பழைய நீடாமங்கலத்தில் வெண்ணாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டு, பயன்பாட்டுக்கு வந்ததைத் தொடா்ந்து, வையகளத்தூா், ... மேலும் பார்க்க

காவிரி டெல்டா விவசாயப் பிரச்னை: நபாா்டு வங்கி அதிகாரிகள் கலந்தாய்வு!

நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காவிரி டெல்டா பகுதி விவசாயப் பிரச்னைகள் குறித்து நபாா்டு வங்கி அதிகாரிகளின் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நபாா்டு வங்கி துணை மேலாண் இயக்குநா... மேலும் பார்க்க

ரேஷன் கடைகளில் முகக்கவசம் வழங்கக் கோரிக்கை!

நியாயவிலைக் கடைகளில் முகக்கவசம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவாரூா் மதிமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் த. ஹரிராஜன் தெரிவித்தது: 2019-இல் கரோனா தொற்ற... மேலும் பார்க்க

சாலை சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவாரூரிலிருந்து ஆந்தக்குடி வரை செல்லும் சாலையை சீரமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கியது. திருவாரூரிலிருந்து அலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா் வழியாக ஆந்தக்குடி வரை செல்லும் சாலையில் ஏராளமான ப... மேலும் பார்க்க