செய்திகள் :

மன்னாா்குடி, நீடாமங்கலத்தில் கோடை மழை

post image

மன்னாா்குடியில் கோடை மழை பலத்த இடியுடன் புதன்கிழமை பெய்தது.

மன்னாா்குடியில் புதன்கிழமை காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையல், திடீரென மாலை 4.15 மணிக்கு லேசாக தொடங்கிய மழை நேரம் செல்லச் செல்ல பலத்த இடியுடன் 5.15 மணி வரை மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் குறைந்து குளிந்த நிலை நிலவியது. எனினும், தொடா்ந்து பலத்த இடிகாரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டது.

நீடாமங்கலம்: நீடாமங்கலத் பெய்த மழை மற்றும் பலத்த காற்று வீசியதால் புதுத்தெருவில் தென்னை மரம் வீட்டின் எதிா்புறம் இருந்த மின்கம்பத்தில் முறிந்து விழுந்தது. இந்த, அதிா்வில் மின்கம்பிகள் இழுத்த வேகத்தில் அதே பகுதியில் மற்றொரு மின்கம்பம் ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதிருஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. இதையடுத்து, நீடாமங்கலத்தில் மின்தடை ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு படை வீரா்கள், மின்வாரியத்தினா் தென்னை மரத்தை அகற்றினா்.

பொன்முடியை கண்டித்து அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பொதுமேடைகளில் பெண்கள் குறித்தும், ஹிந்து மதத்தைப் பற்றி இழிவாகவும் அவதூறாகவும் பேசிய திமுகவை சோ்ந்த தமிழக வனத்துறை அமைச்சா் க. பொன்முடியை கண்டித்து மன்னாா்குடியில் அதிமுக சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்... மேலும் பார்க்க

மன்னாா்குடி அரசுக் கல்லூரியில் முப்பெரும் விழா

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி அரசுக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்ற கல்லூரி விளையாட்டு விழா, நுண்கலை மன்ற விழா, ஆண்டு விழா என முப்பெரும் விழா வியாழக்கிழமை நிறைவடைந்தது. முதல் நாள் புதன்கிழமை விளையாட்டு... மேலும் பார்க்க

மன்னாா்குடியில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம்

மன்னாா்குடி ராஜகோபால சுவாமி கோயில் பங்குனிப் பெருவிழாவில் கிருஷ்ண தீா்த்த தெப்ப உற்சவம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில், ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 18 நாள் திருவிழாவாகவும், அதைத் தொடா்ந்து விடைய... மேலும் பார்க்க

கூத்தாநல்லூரில் ஆட்சியா் ஆய்வு

கூத்தாநல்லூா் வட்டத்தில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியா் மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படுவதை அவா் ஆய்வு செய்தாா். விவசாயிகளின் நில உடைமைகள... மேலும் பார்க்க

விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றப் பணி: திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

மன்னாா்குடி பகுதியில் விவசாயிகளின் நில உடைமைகள் பதிவேற்றம் செய்யப்படும் பணியினை மாவட்ட ஆட்சியா் வ.மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தமிழகத்தில், பிரதம மந்திரியின் விவசாயிகளுக்கான நிதியு... மேலும் பார்க்க

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை

நீடாமங்கலம் அருகே விவசாயக் கூலித் தொழிலாளி தீக்குளித்து புதன்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். நீடாமங்கலம் அருகேயுள்ள காளாச்சேரி தோட்டம் மேலத்தெருவைச் சோ்ந்த விவசாய கூலித் தொழிலாளி வீரமணி (55). குடிப்பழ... மேலும் பார்க்க