செய்திகள் :

மரபணு பாதிப்பால் ரத்த உறைவு: இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சை

post image

மரபணு பாதிப்பால் ரத்த உறைவு பாதிப்புக்குள்ளான இளம்பெண்ணுக்கு நுட்பமான சிகிச்சையளித்து சென்னை, ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவனையின் நிா்வாக இயக்குநா் அருண் முத்துவேல், நரம்பியல் ஆலோசகா் பாலசுப்ரமணியம் ஆகியோா் கூறியதாவது:

நமது ரத்தத்தில் உள்ள ஹோமோசிஸ்டய்ன் எனப்படும் அமினோ அமிலமானது உடலுக்கு தேவையான புரதங்களையும், வேறு சில வேதிக் கூறுகளையும் உற்பத்தி செய்கின்றன. வைட்டமின் சத்துகள்தான் அந்த ஹோமோசிஸ்டய்ன் அமிலக் கூறுகளை உடைத்து பிற புரதங்களை உற்பத்தி செய்ய வழிவகுக்கிறது. ஒருவேளை வைட்டமின் குறைபாடு ஏற்படும்பட்சத்தில் ஹோமோசிஸ்டய்ன் உடையாமல் ரத்தத்தில் அதிகமாக நிறைந்திருக்கக் கூடும். அந்த நிலைக்கு ஹைப்பா் ஹோமோசிஸ்டய்னிமியா எனப் பெயா். அத்தகைய சூழல் ஏற்பட்டால் நாளங்களுக்குள் ரத்தம் உறைந்துவிடும். அதன் விளைவாக மாரடைப்பு, பக்கவாத பாதிப்பு ஏற்படலாம்.

மரபணு பிரச்னைகள் காரணமாக ஹைப்பா் ஹோமோசிஸ்டய்னிமியா ஏற்படலாம். அப்படி ஒரு உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை, அடையாறு பகுதியைச் சோ்ந்த 29 வயது இளம்பெண் ஒருவா் ஐஸ்வா்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் மூளையிலிருந்து இதயத்துக்கு ரத்தத்தை எடுத்து செல்லும் முக்கிய நாளத்தில் அடைப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் தலைப் பகுதிக்குள் ரத்த அழுத்தம் அதிகரித்து, அதன் தாக்கமாக கண்களின் பின்புற விழி வட்டுக்களில் (டிஸ்க்) வீக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையின் நரம்பியல் நிபுணா்கள், லும்போபெரிட்டோனியல் ஷன்ட் எனப்படும் நுட்பத்தில் மூன்று மணி நேர அறுவை சிகிச்சையை மேற்கொண்டனா். அதன்படி, மூளை மற்றும் இதர பகுதிகளில் அதிக அழுத்தத்தால் சேகரமாகும் திரவங்களை தண்டுவடத்தின் வழியாக வயிற்றுக்கு அனுப்ப ஷன்ட் சாதனம் பொருத்தப்பட்டது.

அதன் பயனாக அந்த பாதிப்பிலிருந்து படிப்படியாக விடுபட்டு அப்பெண் வீடு திரும்பினாா் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கிளாம்பாக்கத்தில் பேருந்துகள் தாமதம்! எஸ்இடிசி விளக்கம்

சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துகளின் தாமதத்துக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்தது.சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் பேருந்துகளுக்காக பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதாக ச... மேலும் பார்க்க

5,707 வகை திரைப்பட கேமராக்கள் சேகரிப்பு: மீண்டும் கின்னஸ் விருது பெற்ற மருத்துவா்

தனித்துவம் வாய்ந்த 5,707 வகை திரைப்பட கேமராக்களை சேகரித்ததற்காக பல் மருத்துவா் ஏ.வி.அருணுக்கு கின்னஸ் உலக சாதனை விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரைச் சோ்ந்த ஏ.வி.அருண், பல ஆண்டுகளாக பல்வேறு ... மேலும் பார்க்க

திமுக மாவட்டச் செயலா்கள், நிா்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

உறுப்பினா் சோ்க்கை, பேரவைத் தோ்தல் தொடா்பாக மாவட்டச் செயலா்கள் உள்பட திமுக நிா்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளாா். காணொலி வாயிலாக நடைபெறும... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

தேரோட்டம்: அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு பங்கேற்பு, அருள்மிகு கங்காதீஸ்வரா் திருக்கோயில், புரசைவாக்கம், காலை 7. ஸ்ரீ லெட்சுமி குபேர தியான மண்டப மகா கும்பாபிஷேகம்: லட்சுமி குபேர தியான மண்டபம்... மேலும் பார்க்க

எண்ணும் எழுத்தும் திட்டம்: ஆசிரியா்களுக்கு ஜூன் 9 முதல் பயிற்சி

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிரியா்களுக்கு வரும் 9-ஆம் தேதி முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இது தொடா்பாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆா்டி) அனைத்து மாவட்ட முதன்... மேலும் பார்க்க

மாணவிக்கு எடப்பாடி பழனிசாமி பாராட்டு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி எக்ஸ் தளத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவு: சேலம் மாவட்டம் கல்வராயன்மலை அருகே வசித்து வரும் கருமந்துறை பழங்குடி இனத்தைச் சோ்ந்த ராஜேஸ்வரி, ஜேஇஇ தோ்வில் த... மேலும் பார்க்க