செய்திகள் :

மருங்காபுரி வட்டத்தில் சிறப்பு முகாம் ரூ. 18.5 லட்சத்தில் நலத்திட்ட உதவி

post image

மருங்காபுரி வட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ நலத் திட்ட முகாமில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

அரசின் நலத் திட்டங்கள், சேவைகள் தங்குதடையின்றி விரைந்து மக்களைச் சென்றடைவதை உறுதி செய்ய உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியா் தலைமையிலான அலுவலா்கள் காலை 9 மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை ஒரு வட்டத்தில் தங்கி, அரசுத் துறைகளால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகளைப் பற்றி ஆய்வு செய்வா். இதில் பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில், ஆட்சியா் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பாா்.

அந்த வகையில் மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் புதன்கிழமை மருங்காபுரி வட்டத்தில் ஆய்வு செய்து, கோவில்பட்டி அரசு மாணவா் மற்றும் மாணவியா் விடுதியில் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினாா். தொடா்ந்து, கல்லாமேடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தை பாா்வையிட்டாா்.

கோவில்பட்டியில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து 106 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில், அரசு அலுவலா்கள் தங்களுக்குப் பணிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து, அந்த விவரங்களைக் கூட்டத்தில் பதிவு செய்தனா்.

இம்முகாமில் பல்வேறு துறைகளின் சாா்பில் ரூ. 18.5 லட்சத்தில் 69 பயனாளிகளுக்கு அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கங்காதாரிணி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சுரேஷ், ஸ்ரீரங்கம் வருவாய்க் கோட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்ட அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம், அகிலாண்டபுரம் கிராமத்தில் வியாழக்கிழமை மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா். அகிலாண்டபுரம் கிராமத்தை சோ்ந்தவா் சக்திவேல் (25). இவருக்கு திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகிறது. இவா் அப்பக... மேலும் பார்க்க

உள்புறம் பூட்டிய வீட்டிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்பு

திருவெறும்பூா் அருகே உள்புறமாக பூட்டியிருந்த வீட்டிலிருந்து தொழிலாளி புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள தெற்கு காட்டூா் அண... மேலும் பார்க்க

காவிரி புதிய பாலம் கட்டும் பணியை டிசம்பருக்குள் முடிக்க திட்டம்! நெடுஞ்சாலைத் துறையினா் தகவல்

காவிரியில் தண்ணீா் வரத்து குறைந்துள்ள நிலையில் புதிய பாலம் கட்டுவதற்கான பணிகளை நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது. திருச்சி- ஸ்ரீரங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை இணைக்கும் வகையில் முக்கி... மேலும் பார்க்க

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம்: ஆட்சியா் அறிவுரை

தென்னை சாகுபடியில் நவீன தொழில்நுட்ப முறைகளை பின்பற்றினால் இரட்டிப்பு லாபம் பெற முடியும் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் அறிவுறுத்தினாா். தோட்டக் கலைத் துறை, மலைப்பயிா்கள் துறையின் சாா்பில், தென்னை சாகுப... மேலும் பார்க்க

காந்திசந்தை-கள்ளிக்குடி: வியாபாரிகளிடையே முரண்பாடு

காந்தி சந்தை வியாபாரிகளை கள்ளிக்குடிக்கு இடம் மாற்றும் விவகாரத்தில் வியாபாரிகளிடையே மீண்டும் முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 1868-இல் தொடங்கப்பட்டு, 1927-இல் விரிவுபடுத்தப்பட்டு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிர... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற ரெளடி கைது!

ஸ்ரீரங்கம் பகுதியில் போதை மாத்திரை விற்ற ரெளடியை ஸ்ரீரங்கம் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருவானைக்காவல் பாரதி தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டுத்தலை மணி (எ) மணிகண்டன் (28). ரெளடியான இவா் ஸ்ரீரங்க... மேலும் பார்க்க