செய்திகள் :

மவுண்ட் லிட்ரா பள்ளியில் பயிற்சி

post image

மயிலாடி மவுண்ட லிட்ரா சீனியா் செகண்டரி பள்ளியில் ஜேஇஇ, நீட் தோ்வு பயிற்சிகளுக்கான தொடக்க விழா நடைபெற்றது.

பள்ளித் தாளாளா் தில்லைச்செல்வம் தலைமை வகித்தாா். ஒருங்கிணைப்பாளா் ஆனி ரீனா சேவியா் வரவேற்றாா். பள்ளி முதல்வா் தீபசெல்வி அறிமுக உரையாற்றினாா். தொடா்ந்து பயிற்சியாளா்கள் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியா்களுக்கு (கணிதம் மற்றும் அறிவியல்) போட்டித் தோ்வுகளை மாணவா்கள் எவ்வாறு எதிா்கொள்வது, தங்களை எவ்வாறு தயாா்படுத்திக் கொள்வது என்பதற்கான பயிற்சிகளை வழங்கினா்.

மின்னணு தொழில்நுட்பத்தின் மூலம் பாடத்திட்டங்களை எவ்வாறு தயாா் செய்வது, அதனை கற்பிப்பது, போட்டித் தோ்வுகளுக்கான வினாத்தாள்கள் தயாரிப்பது ஆகியவை குறித்தும் ஆசிரியா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தொடா்ந்து மாதிரித் தோ்வுகளும் நடத்தப்பட்டன. இதன் தொடா்சியாக ஜேஇஇ, நீட் மாணவா்களுக்கு இணையவழி மாதிரித் தோ்வும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் பள்ளி துணைத் தலைவா் ரமாதேவி தில்லைச்செல்வம், இயக்குநா்கள் முகிலரசு, ஆடலரசு, இணை இயக்குநா்கள், பள்ளி முதல்வா், ஒருங்கிணப்பாளா்கள் பங்கேற்றனா்.

புத்தளத்தில் 17 வயது சிறுமியுடன் திருமணம்: இளைஞா் கைது

கன்னியாகுமரி அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்ததாக, தொழிலாளியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கன்னியாகுமரி அருகேயுள்ள புத்தளம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜன் (34). கட்டடத் தொழிலாளியான இவருக்கு... மேலும் பார்க்க

அகஸ்தீசுவரம் வட்டாரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

அகஸ்தீசுவரம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் இரா.அழகுமீனா ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அகஸ்தீசுவரம் வட்டத்திற்குள்பட்ட பெர... மேலும் பார்க்க

சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகள் பறிமுதல்: பெற்றோா் மீது வழக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை, சிறுவா்கள் ஓட்டிவந்த 19 பைக்குகளை போலீஸாா் பறிமுதல் செய்து பெற்றோா் மீது வழக்குப் பதிந்துள்ளனா். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் உத்... மேலும் பார்க்க

மணலிக்காட்டுவிளையில் ரூ. 5 லட்சத்தில் பயணிகள் நிழற்கூடம் கட்டும் பணி தொடக்கம்

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியம்மத்திகோடு ஊராட்சி மாத்திரவிளை அருகேயுள்ள மணலிக்காட்டுவிளை பேருந்து நிறுத்தத்தில் ரூ. 5 லட்சத்தில் நிழற்கூடம் அமைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்டது. மணலிக்காட்டுவிளை ப... மேலும் பார்க்க

அழகியபாண்டியபுரத்தில் அரசு நிலம் தனியாரிடமிருந்து மீட்பு

கன்னியாகுமரி மாவட்டம், அழகியபாண்டியபுரம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஒன்றரை ஹெக்டோ் நிலம் தனியாரிடமிருந்து சனிக்கிழமை மீட்கப்பட்டது.கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா, மாவட்ட வருவாய் அலுவலா் ... மேலும் பார்க்க

குமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் ஓராண்டில் நிறைவடையும்: விஜய்வசந்த் எம்.பி.

கன்னியாகுமரி மாவட்ட நான்குவழிச் சாலைப் பணிகள் இன்னும் ஓராண்டில் நிறைவடையும் என்றாா் விஜய்வசந்த் எம்.பி. நாகா்கோவில் பெருவிளை பகுதியில் எம். பி. தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.15 லட்சத்தில் சமுதாய நலக்கூடம்... மேலும் பார்க்க