செய்திகள் :

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

post image

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் முக்கிய ரயில் நிலையமாக விளங்கும் மாம்பலம் ரயில் நிலையம் ரூ. 14.7 கோடியில் மறுசீரமைக்கப்பட்டு வருகிறது.

சென்னையின் முக்கிய வணிக இடமாக விளங்கும் தியாகராய நகரில் அமைந்துள்ள மாம்பலம் ரயில் நிலையம் நாளொன்றுக்கு 200 மின்சார ரயில்கள், 90 விரைவு ரயில்கள், 32,000 பயணிகளைக் கையாளுகிறது.

தென் மாநிலங்களில் இருந்து வரும் பெரும்பாலான விரைவு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. இதனால் எதிா்கால தேவையைக் கருத்தில் கொண்டு ரயில் நிலையத்தை மறுசீரமைக்கும் பணியை தெற்கு ரயல்வே கடந்த ஆண்டு தொடங்கியது.

தற்போது முக்கிய பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் இந்த மாதத்துக்குள் மீதமுள்ள பணியும் நிறைவடையும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது:

மாம்பலம் ரயில் நிலையத்தின் இருபுறமும் நெரிசலான பகுதி என்பதால் பயணிகள் வந்து செல்வதில் அதிக சிரமம் இருந்து வந்தது. இந்த நிலையில், ரயில் நிலையத்தின் இருபுறமும் விரிவாக்கப்பட்டு பயணிகள் எளிதில் வந்து செல்லும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. கூடுதலாக முன்பதிவு மையங்கள், வாகன நிறுத்தங்கள் அமைக்கப்படுகின்றன.

பயணிகளின் பாதுகாப்பு வசதியை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்கள் வந்து செல்லும் வகையில் நடைமேடை புதுப்பிக்கப்பட்டு பயணிகளுக்கான கூடுதல் இருக்கைகள் அமைக்கப்படுகின்றன.

தற்போது இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த மாத இறுதிக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க

இல்லத்தரசிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஏப்ரல் வரைதான் இருக்குமாம்!

கடந்த டிசம்பர் மாதம் முதல் காய்கறிகளின் விலை சதத்தைத் தொட்டுவிடுவோம் என்று மிரட்டிக்கொண்டிருந்த நிலையில், தற்போது வெங்காயம், தக்காளி என அனைத்துக் காய்கறிகளின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது.பிப்ரவரி... மேலும் பார்க்க

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு!

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த மனுவில், எங்கள் கட்சிக்கு அழைப்பு... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையம் அருகே தமிழ்நாடு ஹஜ் இல்லம்!

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.நாகை மாவட்டத்தில் ரூ. 82.99 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் ஸ்டால... மேலும் பார்க்க

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். ... மேலும் பார்க்க