செய்திகள் :

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்!

post image

நாகையில் ரூ.82.9 கோடி மதிப்பிலான 206 புதிய திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார்.

திமுக அரசின் திட்டப் பணிகளைப் பட்டியலிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தி வருகிறார். அப்போது அவர் நாகை மாவட்டத்திற்கு ஆறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

நாகைக்கு 6 முக்கிய அறிவிப்பு

வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் தரம் உயர்த்தப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் ரூ.280 கோடியில் புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும். கீழ்வேளூர், வேதாரண்யம் வட்டங்களில் கால்வாய்கள், வடிகால்கள் மறுசீரமைக்கப்படும்.

ரூ.250 கோடியில் புதிய சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும்

நாகை நகராட்சி கட்டடம் ரூ.4 கோடி செலவில் சீரமைக்கப்படும்.

சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் அமைக்கப்படும்.

நாகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது.

தெற்குபொய்கைநல்லூர், கோடியக்கரையில் 3 பல்நோக்கு பேரிடர் மையங்கள் கட்டப்படும்.

நாகையில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் ரூ.2 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். நாகையில் புதுமைப் பெண் திட்டம் மூலம் 7,469 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது. நாகை மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

இலங்கை கடற்படையின் அடக்குமுறை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக மத்திய அரசு பார்க்க வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் இலங்கை கடற்படையால் தமிழ்க மீனவர்கள் 3656 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முன்னேறி இருப்பதற்குக் காரணம் இரு மொழி கொள்கைதான் என மத்திய அரசுக்குத் தெரியும். கச்சத்தீவு அருகே தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதை அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்மொழியின் வளர்ச்சி சிலர் கண்களை உறுத்துகிறது. போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்க மத்திய அரசு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள்.

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் தீர்வு காணவேண்டிய பொறுப்பு மத்திய அரசிடம் உள்ளது என்று அவர் பேசினார்.

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக மாற்றியுள்ளது திமுக: அண்ணாமலை

தமிழகத்தை நம்பர் ஒன் கடன்கார மாநிலமாக திமுக மாற்றி வைத்திருக்கிறது என்று அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான... மேலும் பார்க்க

தவெக சார்பில் இஃப்தார் நோன்பு: விஜய் பங்கேற்பு!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மார்ச் 7 ஆம் தேதி நடைபெறவுள்ள இஃப்தார் நோன்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளார்.இது குறித்து தவெக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவ... மேலும் பார்க்க

ராமஜெயம் கொலை வழக்கு: புலன் விசாரணை அதிகாரிகள் மாற்றம்!

அமைச்சா் கே என். நேருவின் சகோதரர் கே என். ராமஜெயம் கொலை வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகளை மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த 2012ஆம் ஆண்டு கே.என். ராமஜெயம், நடைப்பயிற்சி சென்றபோது அட... மேலும் பார்க்க

உங்க கமிஷன் எவ்வளவு? மாறி மாறி குற்றம் சாட்டும் திமுக - பாஜக!

கமிஷன் தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைச்சர் தங்கம் தென்னரசு இடையே சமூக வலைதளத்தில் பரபரப்பான காரசார விவாதம் இணையத்தில் வைரலாகி வருகிறது.தமிழக அரசு, மக்கள் மீது சுமத்தியுள்ள மொத்த கடன் 9.5 லட்சம் கோ... மேலும் பார்க்க

கோவை: மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற கணவர் தற்கொலை!

சூலூர்: சூலூர் அருகே மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு, அதே துப்பாக்கியால் கணவரும் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.கோவை மாவட்டம் சூலூர் அருகே பட்டினம்புதூரில் வசிப்பவர் கிருஷ்ணகுமார் (வயது ... மேலும் பார்க்க

மார்ச் 8 முதல் பயன்பாட்டுக்கு வரும் பிங்க் ஆட்டோ!

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் பிங்க் ஆட்டோ திட்டம் பயன்பாட்டுக்கு வருகிறது.சென்னை மாநகரத்தில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடும் விதமாகவும், பெண்களுக்கான சுயதொழில் வ... மேலும் பார்க்க