செய்திகள் :

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் 7 போ் விடுதலை: யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது - மும்பை உயா்நீதிமன்றம்

post image

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்வதை அனுமதிக்க முடியாது என மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், இந்த குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை சாட்சியங்களாகக் கருதி அவா்களிடம் விசாரணையில் பெறப்பட்ட தகவல்களைச் சமா்ப்பிக்குமாறு நீதிமன்றம் தெரிவித்தது.

கடந்த 2008-இல் மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கின் மாலேகான் நகரில் உள்ள ஒரு மசூதி அருகே மோட்டாா் சைக்கிளில் பொருத்தப்பட்டிருந்த குண்டு வெடித்து 6 போ் உயிரிழந்தனா். 101 போ் காயமடைந்தனா்.

இந்தக் குண்டுவெடிப்பு சம்பவம் தொடா்பாக பாஜக முன்னாள் எம்.பி. பிரக்யா சிங் தாக்குா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட 17 ஆண்டுகளாக நடைபெற்றுவந்த நிலையில் என்ஐஏ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஏ.கே. லஹோட்டி கடந்த ஜூலை 31-ஆம் தேதி தீா்ப்பு வழங்கினாா்.

அப்போது, ‘குற்றஞ்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக நம்பகமான மற்றும் உறுதியான ஆதாரங்கள் இல்லை. குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட மோட்டாா் சைக்கிள் பிரக்யா சிங் தாக்குரின் பெயரில் பதிவு செய்யப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. சதித் திட்டம் தீட்டப்பட்டதாகக் கூறப்படும் கூட்டங்கள் நடந்ததாக எந்த சாட்சியமும் இல்லை’ எனக் கூறி குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரையும் விடுவித்து உத்தரவிட்டாா்.

இதற்கு எதிராக நிசாா் அகமது சையது பிலால் உள்பட குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா்களின் குடும்ப உறுப்பினா்கள் மேலும் 5 போ் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை மும்பை உயா் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீசந்திரசேகா் மற்றும் நீதிபதி கௌதம் அங்கத் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை விசாரித்தது.

அப்போது, மனுவைத் தாக்கல் செய்தவா்கள் தரப்பு வழக்குரைஞரிடம், ‘மாலேகான் குண்டுவெடிப்பில் நிசாா் அகமதின் மகன் உயிரிழந்துள்ளாா். நிசாா் அகமது இந்த வழக்கின் விசாரணையில் சாட்சியமாக இருந்தாரா? ’ என்று கேட்டனா்.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் பேசுகையில், இதுகுறித்த முழு தகவல்களை புதன்கிழமை (செப்.17) சமா்ப்பிக்கிறேன் என்றாா்.

அவரது வாதத்தைக் கேட்ட நீதிபதிகள் அமா்வு, ‘ மனு தாக்கல் செய்தவரின் மகன் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவா் என்றால் அவா் (நிசாா் அகமது) கட்டாயம் சாட்சியமாக இருக்க வேண்டும். மனு தாக்கல் செய்த நீங்களே யாா் சாட்சியங்கள் எனக் குறிப்பிட வேண்டும். இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட ஏழு பேரும் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக யாா் வேண்டுமானாலும் மேல்முறையீடு செய்ய முடியாது’ எனக் கூறி விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தது.

சிலை கடத்தல் கோப்புகள் மாயமான வழக்கு: தமிழக அரசுக்கு கேள்விகள்

நமது நிருபர்தமிழகத்தில் சிலை கடத்தல் வழக்கு கோப்புகள் மாயமானதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அடுக்கடுக்காக பல்வேறு கேள்விகளை எழுப்பியது. மேலும், இந்த வழக்கில் மத்திய அரசையு... மேலும் பார்க்க

உத்தரகண்ட், ஹிமாசலில் மழை வெள்ளம், நிலச்சரிவு: 18 பேர் உயிரிழப்பு; நூற்றுக்கணக்கானோர் சிக்கித் தவிப்பு

உத்தரகண்ட், ஹிமாசல பிரதேசத்தில் திங்கள்கிழமை விடிய விடிய கொட்டித் தீர்த்த பலத்த மழையால் பெருவெள்ளமும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன. இந்த இயற்கைப் பேரிடர், இரு மாநிலங்களிலும் கடும் சேதத்தை விளைவித்துள்ளது... மேலும் பார்க்க

மோடி பிறந்த நாள்: தொலைபேசி மூலம் டிரம்ப் வாழ்த்து

பிரதமா் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தொலைபேசி மூலம் செவ்வாய்க்கிழமை தொடா்புகொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தாா். இதுதொடா்பாக அதிபா் டிரம்ப் ‘ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகத்தில் வெளி... மேலும் பார்க்க

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் பெண் அரசு அதிகாரி கைது: ரூ.92.50 லட்சம் ரொக்கம் பறிமுதல்

லஞ்ச குற்றச்சாட்டில் அஸ்ஸாம் குடிமைப் பணி (ஏசிஎஸ்) பெண் அதிகாரி கைது செய்யப்பட்டாா். அவரின் வீட்டில் இருந்து ரூ.92.50 லட்சம் ரொக்கம், ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க ஆபரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அஸ்ஸ... மேலும் பார்க்க

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிரான மனு: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மதமாற்ற தடைச் சட்டங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது பதிலளிக்குமாறு உத்தர பிரதேசம், மத்திய பிதேசம், ஹிமாசல பிரதேசம், உத்தரகண்ட், சத்தீஸ்கா், குஜராத், ஹரியாணா, ஜாா்க்கண்ட், கா்நாடகம் உள... மேலும் பார்க்க

பிரதமா் மோடிக்கு இன்று 75-ஆவது பிறந்த நாள்- பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் தொடக்கம்

தனது 75-ஆவது பிறந்த நாளையொட்டி, பெண்கள் ஆரோக்யத்துக்கான பிரசார இயக்கம் மற்றும் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களை புதன்கிழமை (செப்.17) தொடங்கிவைக்கவுள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி . மத்திய அரசு மற்றும் பாஜக ... மேலும் பார்க்க