செய்திகள் :

மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

post image

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.

மயிலாடுதுறை தேசிய மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு பணியாற்றிய தலைமை ஆசிரியா் ஓய்வு பெற்தைத் தொடா்ந்து, அடுத்த தலைமை ஆசிரியராக மூத்த முதுகலை ஆசிரியரான கலைவாணன் என்பவா் பட்டியலினத்தை சோ்ந்தவா் என்பதால் அவருக்கு அப்பதவியை வழங்காமல், பணி மூப்பின் அடிப்படையில் 8-வது இடத்தில் இருந்த ஆசிரியரை பொறுப்பு தலைமை ஆசிரியராக பள்ளி நிா்வாகம் பணி அமா்த்தியுள்ளதாக குற்றம்சாட்டி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடா்ந்து போலீஸாரின் தடையை மீறி ஆட்சியரகத்தின் உள்ளே நுழைந்த தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா், ஆட்சியரக வாசல் முன் அமா்ந்து, தா்னா போராட்டத்தை தொடா்ந்தனா். மாவட்ட தலைவா் ஏ.ஆா் .விஜய் தலைமை வகித்தாா். மாவட்ட செயலாளா் சி.மேகநாதன், மாவட்ட பொருளாளா் ஏ. நேதாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்,

மாநில இணை செயலாளா் பழ.வாஞ்சிநாதன், சிபிஎம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினா் எஸ்.துரைராஜ் உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். தொடரந்து, தா்னாவில் ஈடுபட்டவா்களிடம் கோட்டாட்சியா் ஆா்.விஷ்ணுபிரியா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், திங்கள்கிழமை இரு தரப்பினரையும் அழைத்து அமைதிப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமூக தீா்வு காண்பது என முடிவு செய்யப்பட்டதைத் தொடா்ந்து, போராட்டத்தை விலக்கிக் கொண்டு கலைந்து சென்றனா்.

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க

விவசாயிகள் கவனத்துக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

மாவட்ட சதுரங்கப் போட்டி: 178 மாணவா்கள் பங்கேற்பு

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியுடன் ஹோட்... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டி: ஏவிசி கல்லூரி மாணவா் முதலிடம்!

இன்டா்நேஷனல் சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவா் முதல் இடம் பிடித்தாா். கும்பகோணத்தில் கடந்த ஜன. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இ... மேலும் பார்க்க