செய்திகள் :

மாவட்டந்தோறும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள்! - பட்ஜெட்டில் அறிவிப்பு

post image

அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைக்கப்படும் என பட்ஜெட் உரையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சனிக்கிழமை(பிப். 1) தாக்கல் செய்தார்.

இதனைத் தொடர்ந்து, நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மக்களவையில் அவர் உரையாற்றி வருகிறார்.

அப்போது பேசிய அவர்,

"அனைத்து மாவட்டங்களிலும் புற்றுநோய் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் மருத்துவப்படிப்புக்கு கூடுதலாக 75 ஆயிரம் இடங்கள் உருவாக்கப்படும்.

இதையும் படிக்க | கிசான் அட்டை மூலம் ரூ. 5 லட்சம் வரை கடன்! - நிதியமைச்சர் அறிவிப்பு

வீடுகளுக்கு குடிநீர் வழங்கும் ஜலஜீவன் திட்டம் 2028 வரை நீட்டிக்கப்படுகிறது.

நகர்ப்புறங்களில் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள ரூ. 1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு.

கல்விக்கான செய்ற்கை நுண்ணறிவு மையம் உருவாக்கப்படும்.

இந்தியாவில் பொம்மைகளை தயாரிக்க சிறப்பு திட்டம் உருவாக்கப்படும். பொம்மை தயாரிப்பில் இந்தியா உலக அளவில் மையமாக திகழ தேசிய பொம்மைகளுக்கான செயல் திட்டம் கொண்டு வரப்படும்" என்று தெரிவித்தார்.

பட்ஜெட்டைவிட கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று கூறுங்கள்: அகிலேஷ் யாதவ்

மகா கும்பமேளாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்ற தரவு பட்ஜெட் தரவைவிட முக்கியமானது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறினார்.2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் ... மேலும் பார்க்க

பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!

பட்ஜெட் உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உச்சரிக்கவில்லை என்று தமிழக எம்பி தயாநிதி மாறன் விமர்சித்துள்ளார்.2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதிய... மேலும் பார்க்க

2025-26 மத்திய பட்ஜெட்: வளர்ச்சி, பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும்

புது தில்லி: வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தை வலுப்படுத்துதலில் கவனம் செலுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். 2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா ச... மேலும் பார்க்க

பட்ஜெட்: மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி!

மாணவர்களுக்கு தாய்மொழியிலேயே டிஜிட்டல் கல்வி வழங்கப்படும் என பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 2025 - 26 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் நிதியமைச்சர் நிர்ம... மேலும் பார்க்க

1.15 நிமிடங்களில் நிறைவுபெற்ற மத்திய பட்ஜெட் உரை!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பாண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரையை நிறைவு செய்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ... மேலும் பார்க்க

இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டம்!

இந்தியாவில் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு திட்டத்தை நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகி... மேலும் பார்க்க