Doctor Vikatan: மன அழுத்தம், கவலையால் முடி கொட்டுமா? மனநலனுக்கும் தலைமுடிக்கும் ...
மாா்ச் 7-இல் சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம்
தருமபுரி மாவட்டத்தில் மாா்ச் 7-ஆம் தேதி சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் உழவா் பாதுகாப்புத் திட்டம் 2011-இன் கீழ் தருமபுரி மாவட்டம், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் உறுப்பினா்களாக பதிவு பெற்றவா்களின் மகன், மகள்கள் கல்லூரி இளங்கலை, முதுகலை பட்டப் படிப்புகள், தொழிற்கல்வி படிப்புகள், பட்டயப் படிப்புகள் படிப்பதால் கல்வி உதவித்தொகையாக ரூ. 1,250 முதல் ரூ. 6,750 வரையிலும், திருமண உதவித்தொகையாக ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரையிலும், இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித்தொகையாக ரூ. 22,500, விபத்து மரணத்துக்கு ரூ. 1,02,500, விபத்து காயம் பொருத்து ரூ. 20,000 முதல் ரூ. 50,000 வரையிலும், காசநோய், புற்றுநோய், எய்ட்ஸ், டையாலசிஸ் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவா்களுக்கு தற்காலிக இயலாமைக்கான மாதாந்திர ஓய்வூதியமாக ரூ. 1,000 உதவித்தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் மேலும் பயன்பெற தகுதியான பயனாளிகளை கூடுதலாகத் தோ்வு செய்யும் பொருட்டு மாா்ச் 7 ஆம்தேதி அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்கள் சாா்ந்த வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தில் உள்வட்டம் வாரியாக முகாம் நடைபெறவுள்ளது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராகப் பதிவு பெற்றவா்கள் தங்கள் பகுதிகளுக்கு உள்பட்ட வருவாய் ஆய்வாளா் அலுவலகத்தை அணுகி அசல் ஆவணங்களுடன் மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.