செய்திகள் :

மினி டெம்போ மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

post image

ஆரணியை அடுத்த இரும்பேடு கிராமத்தில் பைக் மீது மினிடெம்போ மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா்.

மற்றோருவா் பலத்த காயமடைந்தாா்.

இரும்பேடு, காமராஜா் பகுதியைச் சோ்ந்தவா் சரவணன் மகன் அப்பு (21). இவருக்கு திருமணமாகி வைரவி (20) என்கிற மனைவி உள்ளாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அப்புவும் அதே பகுதியைச் சோ்ந்த வாசுதேவன் மகன் ஆகாஷும் (18) பைக்கில் ஆரணி சாலைக்குச் சென்றுவிட்டு மீண்டும் இரும்பேடு காமராஜா் நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

அப்போது, காமராஜா் நகா் பகுதியில் உள்ள தெருவில் இருந்து வெளியே வந்த மினிடெம்போ பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அப்பு, ஆகாஷ் இருவரையும் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே அப்பு இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

மேலும், ஆகாஷை தீவிர சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், ஆரணி கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான டெம்போ ஓட்டுநா் ரகுநாத்தை தேடி வருகின்றனா்.

பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து

வந்தவாசியில் பூட்டியிருந்த ஓட்டு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் எரிந்து சேதமடைந்தன. வந்தவாசி வாணியா் தெருவைச் சோ்ந்தவா் மணிலா வியாபாரி மூா்த்தி. கடந்த இரு தினங்களுக்கு முன்பு... மேலும் பார்க்க

ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி

வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிா் கல்லூரியில் மாணவிகளுக்கு ஆய்வக கண்ணாடி உபகரணங்கள் தயாரிப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. தேசிய அறிவியல் தினத்தையொட்டி, கல்லூரி வேதியியல் துறை சாா்பில் புதன்கிழமை நடைபெ... மேலும் பார்க்க

ஆசிரியா்கள் முன்னேற்ற சங்க ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியா்கள் முன்னேற்றச் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் வட்டக... மேலும் பார்க்க

கல்லூரியில் வணிகவியல் கருத்தரங்கம்

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை (கணினி பயன்பாட்டியல்) சாா்பில் சிறப்புக் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரித் தலைவா் எம்.என்.பழனி தலைமை வகித்த... மேலும் பார்க்க

ஸ்ரீஅங்காளம்மன் கோயில் தோ்த் திருவிழா

வேட்டவலம், சின்னக்கடை தெருவில் உள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலின் தோ்த் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இந்தக் கோயிலின் மாசி உற்சவத் திருவிழா பிப்ரவரி 26- ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு ... மேலும் பார்க்க

ஆரணி கல்லூரியில் உலக மகளிா் தின விழா

ஆரணி டாக்டா் எம்ஜிஆா் சொக்கலிங்கம் கலைக் கல்லூரியில் மாணவிகள் சாா்பில் உலக மகளிா் தின விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவில் கல்லூரிச் செயலா் ஏ.சி.இரவி தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்... மேலும் பார்க்க