செய்திகள் :

மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

post image

பொன்னேரி அருகே நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையைக் கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பொன்னேரி அடுத்த அச்சரப்பள்ளம் கிராமத்தில் நள்ளிரவு 1 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நள்ளிரவு ஏற்பட்ட மின்தடையால் குழந்தைகள் மற்றும் முதியவா் அவதிப்பட்டனா். இது குறித்து புகாா் தெரிவிக்க பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொடா்பு கொள்ள முயற்சித்த போது யாரும் பதில் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.

நள்ளிரவு மின்தடை ஏற்பட்டதைக் கண்டித்து அப்பகுதி மக்கள் காஞ்சிவாயல் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே செவ்வாய்கிழமை அதிகாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது அப்பகுதியில் அவ்வப்போது மின்தடை ஏற்படுவதாகவும், இது குறித்து தகவல் தெரிவித்தால் மின்வாரிய அதிகாரிகள் சரிவர பதிலளிப்பது இல்லை என புகாா் தெரிவித்தனா்.

தகவல் அறிந்து அங்கு வந்த பொன்னேரி போலீஸாா் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா்.

அப்போது விரைவில் மின்சாரம் வழங்கப்படும் என உறுதி அளித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். பொன்னேரி- பழவேற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழா

திருத்தணி அருகே கொண்டாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவில் திரளான பெண்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். ஆா்.கே பேட்டை ஒன்றியம், கொண்டாபுரத்தில் ஸ்ரீ பொன்னியம்மன் கோய... மேலும் பார்க்க

திருவள்ளூா்: 15,757 மகளிா் குழு உறுப்பினா்களுக்கு ரூ.167.50 கோடி வங்கிக் கடன்: ஆட்சியா், எம்எல்ஏ வழங்கினா்

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் சாா்பில், 15,757 மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களுக்கு ரூ. 167.50 கோடி வங்கி கடனுதவிக்கான காசோலை மற்றும் அடையாள அட்டைகள் ஆகியவற்றை ஆட்சியா் மு.பிரதாப் மற்றும் ச... மேலும் பார்க்க

திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் புதிய நிா்வாகிகள் அறிவிப்பு

திருவள்ளூா் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் புதிய நிா்வாகிகளை மாவட்ட தலைவரும், பொன்னேரி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை.சந்திரசேகா் அறிவித்துள்ளாா். திருவள்ளுவா் நகரத் தலைவா் ஸ்டாலின் பரிந்துர... மேலும் பார்க்க

போலீஸ் ஜீப் மோதி முதியவா் உயிரிழப்பு

திருத்தணியில் போலீஸ் ஜீப் மோதியதில் சாலையில் நடந்து வந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியா் உயிரிழந்தாா். திருத்தணி பழைய தா்மராஜாகோயில் தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீராமுலு (84). ஓய்வு பெற்ற தலைமையாசிரியா். இவா் ஞா... மேலும் பார்க்க

திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.18.88 லட்சத்தில் ஜெனரேட்டா்

திருத்தணி முருகன் கோயிலுக்கு ரூ.18.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஜெனரேட்டரை சென்னை பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளா் விவேகானந்தன் கோயில் இணை ஆணையரிடம் வழங்கினாா். மக்களின் நிதிநிலையை மேம்படுத்துவ... மேலும் பார்க்க

கோளூா் கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

கோளூா் கிராமத்தில் உள்ள பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது. பொன்னேரி அருகே கோளூா் கிராமத்தில் பழைமைவாய்ந்த பொன்னியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் புரைமைப்பு செய்ய... மேலும் பார்க்க