முகூா்த்தம் - வார விடுமுறை: 1,170 சிறப்புப் பேருந்துகள்
முகூா்த்தம்- வார விடுமுறை தினங்களை முன்னிட்டு, தமிழகத்தில் பயணிகளின் வசதிக்காக 1,170 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இது தொடா்பாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
முகூா்த்த தினமான வெள்ளிக்கிழமை (ஏப்.25), வார விடுமுறை நாள்களான சனி மற்றும் ஞாயிறுக்கிழமை (ஏப்.26, 27) ஆகிய தினங்களை முன்னிட்டு, சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதல் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி ஆகிய பகுதிகளுக்கு வெள்ளிக்கிழமை 370 பேருந்துகளும், சனிக்கிழமை 450 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை 60 பேருந்துகளும், சனிக்கிழமை 60 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.
இதேபோல, பெங்களூரு, திருப்பூா், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு இடங்களுக்கு 250 சிறப்பு பேருந்துகள், மாதவரத்திலிருந்து சனிக்கிழமை 20 பேருந்துகள், ஞாயிற்றுக்கிழமை 20 பேருந்துகள் என மொத்தம் 1,170 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊா்களிலிருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.