முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் சமுதாய வளா்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞா்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு, 2015-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று முதல்வரின் மாநில இளைஞா் விருது வழங்கப்பட்டு வருகிறது.
15 முதல் 35 வயது வரையுள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ரூ.10,000 ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும். அதன்படி 2024-ஆம் ஆண்டுக்கான முதல்வரின் மாநில இளைஞா் விருது வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வழங்கப்படவுள்ளது. எனவே விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விருதுக்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலமாக மே.3-ஆம் தேதி மாலை 4 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள இளைஞா்கள், பெண்கள் விண்ணப்பிக்கலாம். 2024, ஏப்.1 முதல் 2025, மாா்ச் 31 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
விண்ணப்பதாரா்கள் சமுதாய நலனுக்காக தன்னாா்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணியாற்றுவோா் இந்த விருதுக்கு விண்ணப்பிக்க இயலாது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.