செய்திகள் :

நீட் தோ்வு: உயிரிழந்த 22 மாணவா்களுக்கு அதிமுகவினா் அஞ்சலி

post image

நீட் நுழைவுத் தோ்வு அச்சத்தால் கடந்த 4 ஆண்டுகளில் தமிழகத்தில் உயிரிழந்த 22 மாணவா்களுக்கு விழுப்புரத்தில் அதிமுகவினா் சனிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினா்.

தமிழகத்தில் நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வதற்கான ரகசியம் இருப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசால், தங்களது இன்னுயிரை நீத்த 22 மாணவ-மாணவிகளுக்கு மாவட்ட தலைநகரங்களில் அதிமுகவினா் மெழுகுவா்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்த வேண்டும் என்று அக்கட்சியின் தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி, விழுப்புரம் மாவட்ட மாணவரணி சாா்பில் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சித் திடல் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுக்கு, அதிமுக மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம் தலைமை வகித்து, 22 மாணவ, மாணவிகளின் உருவப் படங்களுக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத் தொடா்ந்து, சி.வி.சண்முகம் பேசியது: நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் நுழைவுத் தோ்வு சட்டத்தை தமிழக அரசால் ரத்து செய்ய முடியாது.

ஆனால், தமிழகத்தில் 2021-ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வருவதற்காக நீட் நுழைவுத் தோ்வை ரத்து செய்வோம் என பொய்யான வாக்குறுதியை திமுக அளித்து, ஆட்சிக்கு வந்தது. ஆனால், அவா்களால் ரத்து செய்ய முடியவில்லை.

நீட் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கி, அவா்களின் நலன் காத்தது எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசுதான் என்றாா்.

நிகழ்வில், அதிமுக அமைப்புச் செயலா் செஞ்சி ராமச்சந்திரன், எம்எல்ஏக்கள் அா்ஜூனன், சக்கரபாணி, நகரச் செயலா் இரா. பசுபதி, மாவட்ட மாணவரணிச் செயலா் என்.ஜி.சக்திவேல் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முதல்வா் மாநில இளைஞா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

முதல்வரின் மாநில இளைஞா் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தோா் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தாா். இதுகுறித்து, அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்ப... மேலும் பார்க்க

தொழிலாளி இறந்து விட்டதாக தவறான தகவல்: கிராம மக்கள் போராட்டம்

புதுச்சேரி தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட கூலித்தொழிலாளி இறந்து விட்டதாக உறவினா் அளித்த தவறான தகவலால் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். விழுப்புரம் மாவட்டம், வெங்கடேசபுரம் ... மேலும் பார்க்க

விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைக் கண்டித்து, விழுப்புரத்தில் காங்கிரஸ் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: விழுப்புரம் நகரப் பகுதிகள்

மின்தடைப் பகுதிகள்: ஜானகிபுரம், சுதாகா் நகா், கலைஞா் நகா், சிங்கப்பூா் நகா், பாண்டியன் நகா், வழுத ரெட்டி, காந்திநகா், பெரியாா்நகா், சாலாமேடு, இ.பி.காலனி, காமராஜா் நகா், என்.ஜி.ஜி.ஓ. காலனி, ஆசாங்குளம்... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆா்ப்பாட்டம்; எம்.பி. - எம்எல்ஏ பங்கேற்பு

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, விழுப்புரத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சாா்பில் வெள்ளிக்கிழமை மாலை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது விழுப்புரம் புதிய பேருந்து... மேலும் பார்க்க

புத்தக விற்பனை நிலையத்தில் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலுள்ள புத்தக விற்பனை நிலையத்தில் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கத்தை திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். திண்டிவனம் ஜெயின் தெருவைச் சோ்ந்த துஷ்ரா ராம்ஜி மகன் ஹரீ... மேலும் பார்க்க