செய்திகள் :

முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஹேக் செய்து ரூ. 3 லட்சம் திருட்டு!

post image

கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகளை ஒரு மோசடி கும்பல் ஹேக் செய்து ரூ. 3 லட்சத்தைத் திருடியுள்ளது தெரியவந்துள்ளது.

இணையவழி மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை இதில் சிக்கிக் கொள்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வந்தாலும் குற்றங்கள் பெருமளவில் அதிகரித்து வருகின்றன.

இந்நிலையில் கர்நாடக முன்னாள் முதல்வர் சதானந்த கௌடாவின் வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு ரூ. 3 லட்சம் திருடுபோயுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி பெங்களூருவில் ஆர்.எம்.வி. எக்ஸ்டென்ஷனில் உள்ள பிபிஎம்பி பூங்காவில் 75 குடிமைப் பணியாளர்கள் கௌரவிக்கும் நிகழ்ச்சியில் நேற்று(செப். 17) இந்த சம்பவம் குறித்து கௌடா பேசியுள்ளார்.

அவர் பேசுகையில், "இன்று காலை எனது மொபைல் போனை பார்க்கும்போது எனது மூன்று வங்கிக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது தெரிந்தது. ஒவ்வொரு வங்கிக் கணக்கிலிருந்து தலா சுமார் ரூ.1 லட்சம் டெபிட் ஆனது. அதன்படி ஹெச்டிஎஃப்சி, எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கிக் கணக்குகளில் இருந்து யுபிஐ பணப்பரிவர்த்தனைகள் மூலம் ஹேக்கர்கள் ரூ. 3 லட்சம் பணத்தைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து நான் சைபர் குற்றப்பிரிவில் புகார் அளிப்பேன்" என்று கூறினார்.

அரசும் காவல்துறையும் சைபர் குற்றங்களைத் தடுக்க முயற்சித்து வருகிறது. எனினும் இணையவழி குற்றங்கள் ஆபத்தான அளவில் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குற்றங்கள் கட்டுப்படுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் மிகப்பெரிய நிதிக் கொள்ளைச் சம்பவங்கள் நிகழக் கூடும் என்றும் எச்சரித்துள்ளார்.

முன்னதாக கன்னட நடிகர் உபேந்திரா மற்றும் அவரது மனைவி பிரியங்காவின் மொபைல்போன்களை இணைய மோசடி கும்பல் ஹேக் செய்து, அவர்களது போனில் உள்ள தொடர்புகளில் இருந்து ரூ. 55,000 மோசடி செய்தது குறிப்பிடத்தக்கது.

இதேபோல 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்றும் நீங்கள் குற்றம் செய்ததாகக் கூறி ஆன்லைனிலேயே பல மணி நேரம் இருக்க வைத்து பணத்தை பரிமாற்றம் செய்யும் மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.

டிஜிட்டல் அரெஸ்ட் அல்லது இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்

Former Karnataka CM Sadananda Gowda loses Rs 3 lakh after fraudsters hack his bank account

ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு: யோகி ஆதித்யநாத்

மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை வரவேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், நாட்டிற்காகப் பிரதமர் மோடியின் தீபாவளி பரிசு என்று கூறியுள்ளார். செய்தியாளர்களின் சந்திப்பில் ... மேலும் பார்க்க

மகனின் திருமண வரவேற்பு தொகையை விவசாயிகளுக்குக் கொடுத்த எம்எல்ஏ!

விவசாயிகளின் நலனுக்காக எம்எல்ஏ பதுலா லக்ஷ்ம ரெட்டி ரூ. 2 கோடி நன்கொடையை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் இன்று வழங்கினார். நல்கொண்டா மாவட்டத்தின் மிரியால்குடாவைச் சேர்ந்தவர் ஆளும் காங்கிரஸ் எம்.... மேலும் பார்க்க

ஒரே ஒரு வங்கிக் கணக்கு வைத்திருக்கிறீர்களா? ஆபத்து

வங்கிக் கணக்கு என்பது ஆடம்பரம் என்ற நிலை மாறி அத்தியாவசியமாகிவிட்ட நிலையில், தற்போது சைபர் அச்சுறுத்தல்களால், இரண்டு வங்கிக் கணக்கு என்பது அடிப்படையாகியிருக்கிறது.பெரும்பாலும், சைபர் அச்சுறுத்தல்களைப்... மேலும் பார்க்க

ராகுலின் குற்றச்சாட்டு தவறானவை, ஆதாரமற்றவை! தேர்தல் ஆணையம்

வாக்காளர்களை நீக்க முயற்சித்தது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகள் அனைத்து ஆதாரமற்றவை என்று இந்திய தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.ஆளுங்கட்சியுடன் இணைந... மேலும் பார்க்க

திருடர்களைப் பாதுகாப்பதை நிறுத்திவிட்டு தரவுகளைக் கொடுங்கள்! தேர்தல் ஆணையருக்கு ராகுல் கெடு!

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் திருடர்களைப் பாதுகாப்பதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.காங்கிரஸ் அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரா... மேலும் பார்க்க

22 நாள்களுக்குப் பிறகு வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை மீண்டும் தொடக்கம்!

ஜம்மு-காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை இன்று காலை முதல் மீண்டும் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரில் பெய்து கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக, கடந்த 22 நாள்களாக வைஷ்ணவி தே... மேலும் பார்க்க