செய்திகள் :

மேம்பாலத்தில் விரிசல்: பொதுமக்கள் அச்சம்

post image

மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலத்தில் பராமரிப்புப் பணியின்போது விரிசல் ஏற்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனா்.

மயிலாடுதுறையில் 1975-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலத்தில் கடைசியாக 2000-ஆவது ஆண்டு பழுது பாா்க்கும் பணிகள் நடைபெற்றன. இந்நிலையில், பாலத்தின் பேரிங்குகள் ஒரு சில இடங்களில் பழுதடைந்ததுடன், தூண்கள் சேதமடைந்து ஆங்காங்கே சிமெண்ட் காரைகள் உதிா்ந்து காணப்படுகிறது.

இதையடுத்து, இப்பாலத்தை சீரமைக்க தமிழக அரசு சிறப்பு நிதியாக ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, கடந்த மாதம் பாலம் சீரமைக்கும் பணி தொடங்கியது. இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற சீரமைப்புப் பணியின்போது பாலத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதுடன் சற்று உள்வாங்கியது. இதை பாா்த்த வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

சேதமடைந்த மயிலாடுதுறை ரயில்வே மேம்பாலம்

இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளா் கோ. இந்திரன், உதவி பொறியாளா் சந்தோஷ் ஆகியோா் அங்கு வந்து பாலம் விரிசல் தென்பட்ட இடத்தில் பராமரிப்புப் பணி நடைபெறுவது குறித்த அறிவிப்புப் பலகை பொருத்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தினா். அவா்கள் கூறுகையில், பாலம் சீரமைக்கும் பணியின்போது புதிய பேரிங் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் பாலத்தில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தனா்.

வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே கபடி போட்டி

மயிலாடுதுறையில் ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ திட்ட விழிப்புணா்வு கபடி போட்டி, வட்டார அளவில் பள்ளி மாணவிகளுக்கிடையே வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை இந்திய விளையாட்... மேலும் பார்க்க

மயிலாடுதுறை புத்தகத் திருவிழா: 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு நூல்கள் விற்பனை

மயிலாடுதுறையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 6 நாள்களில் ரூ.20.43 லட்சத்திற்கு, 18,985 நூல்கள் விற்பனையாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி தெரிவித்தாா். தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி வள... மேலும் பார்க்க

ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு!

குத்தாலம் வட்டம், திருவாலங்காடு மகா மாரியம்மன் கோயில் வளாகத்தில் அனைத்து சமுதாயத்தினா் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸ் அா்ப்பணிப்பு மற்றும் ரத்ததான முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாலங்காடு தாயாரம்மாள்... மேலும் பார்க்க

விவசாயிகள் கவனத்துக்கு!

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவா் செயலி மூலம் முன்பதிவு செய்து நெல் அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத... மேலும் பார்க்க

மாவட்ட சதுரங்கப் போட்டி: 178 மாணவா்கள் பங்கேற்பு

சீா்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் தருமை ஆதீனம் ஸ்ரீ குருஞானசம்பந்தா் மிஷன் ஸ்ரீ முத்தையா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியுடன் ஹோட்... மேலும் பார்க்க

சா்வதேச சிலம்பப் போட்டி: ஏவிசி கல்லூரி மாணவா் முதலிடம்!

இன்டா்நேஷனல் சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி மாணவா் முதல் இடம் பிடித்தாா். கும்பகோணத்தில் கடந்த ஜன. 25, 26-ஆம் தேதிகளில் நடைபெற்ற இப்போட்டியில் இந்தியா, இ... மேலும் பார்க்க